தென்னாப்பிரிக்க தொடருக்கு முன் கேதர் ஜாதவ் மஹாராஷ்டிரா அணிக்காக ஆடப்போகிறார்
காயத்தில் இருந்து மீண்டு வந்த இந்திய அணியின் பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் தற்போது தனது உள்ளூர் அணியான மஹாராஷ்டிரா அணியில் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஆடுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகி இருந்தார் கேதர் ஜாதவ். அவருக்கு காயம் காரணமாக ஆட முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டு தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் காயத்தில் இருந்து மீண்டு வந்ததால் வரும் தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
ஒருநாள் மற்றும் டி20 தொடரில் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டதால் தற்போது அவர் பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி ஒருநாள் தொடர் துவங்க உள்ளது.
ஆனால் அதற்கு முன்னர் சையத் முஷ்டாக் அலி டி29 கோப்பை நடைபெற இருக்கிறது. அந்த தொடரில் கலந்து கொள்வதற்காக தனது உள்ளூர் அணியான மஹாராஷ்டிரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் கேதர் ஜாதவ்.
மேலும், இந்த அணியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் ராகுல் திருப்தியும் சேர்க்கப்பட்டுள்ளார்.
மஹாராஷ்டிரா அணி : அங்கிட் பாவனே, ஜெகதீஷ் ஜொப், சத்யஜித் பச்சதேவ், ப்ராயக் பாடி, சமட் பல்லா, ருத்துராஜ் கேக்வாட், ஸ்வப்னில் குகாலே, கேதர் ஜாதவ், சம்சுசாம காஸி, டொமினிக் முத்துஸ்வாமி, நிகில் நாயக், நாவசத் சைக், ராகுல் திருபதி, விஜய் ஜோல், ஸ்ரீகாந்த் முண்டே, திவ்யாங் படேல்