மேத்யூசை விட்டிருக்கக் கூடாது
மேத்யூஸ் கேப்டன் பொருப்பில் இருந்து விலக இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமத்திருக்கக் கூடாது. மேலும், அவரை அந்த பொருப்பில் இன்னும் சில காலம் நீடிக்க வலியுருத்தி இருக்க வேண்டும் என் முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா தற்போது கூறியுள்ளார். மேத்யூசை விட்டிருக்கக் கூடாது என ரணதுங்கா கூறியுள்ளார். இந்தியாவிற்க்கு முன்னர் தனது சொந்த மண்ணில் இலங்கை அணி ஜிம்பாவேயுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடியது.
இதில் டெஸ்ட் தொடரை வென்றாலும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கத்துக்குட்டி ஜிம்பாப்வே அணியிடம் இழந்தது இலங்கை அணி. மேலும் டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியயும் இழந்தது. இதன் காரணமாக மூவகையான போட்டிகளில் இருந்தும் தனது கேப்டன்சிப் பதவியை ராஜினாம செய்வதாக அறிவித்தார். இதனை ஏற்றுகொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம், டெஸ்ட் போட்டிகளுக்கு தினேஷ் சண்டிமாலையும், ஒரு நாள் போட்டிகளுக்கு தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்காவையும் நியமித்தது.

இதனை மையமாக வைத்து தற்போது இலங்கை அணியின் முன்னள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
அர்ஜுனா ரணதுங்கா
அதாவ்து , இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆஞ்சலோ மேத்யூசை கேப்டன் பதவியில் இருந்து விளக அனுமத்திது இருக்கக் கூடாது, அவரை இன்னும் சில காலம் கேப்டனாக இருக்க வலியிருத்தி இருக்க வேண்டும். இலங்கை அணி அவரது தலைமையில் அப்போதைய நெ.1 டெஸ்ட் அணியான ஆஸ்திரேலியாவை வொய்ட் வாஷ் செய்த போது பல்வேரு தர்ப்பினரும் அதில் இருந்து புகழை தேடிகொண்டனர்.
அவர் மிகவும் பாசிட்டிவ் ஆன ஒரு வீரர். ஜிமபாப்வேயுடன் தோற்றது அவரால் தான் என் அனைவரும் குறை கூறியே அவரி நெகட்டிவ் ஆக மாற்றி விட்டனர். அவர் தனது தன்னம்பிக்கயை இழந்து விட்டார். அதனாலேயே தனது கேப்டன் பதவியை துறந்துவிட்டர்.

The third one day international (ODI) cricket match between Sri Lanka and India takes place in Pallekele on August 27. / AFP PHOTO / ISHARA S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)
இந்தியா இலங்கை இடயேயான 3ஆவது ஒரு நாள் போட்டி இன்று மதியம் 2:30 மணிக்கு இலங்கையில் உள்ள பல்லகெலே மைதானத்தில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று 2-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி.