Cricket, India, West Indies, Virat Kohli, Anil Kumble, Virender Sehwag, Gary Kirsten

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ரியலான போட்டி அணியாக ஆஸ்திரேலியா திரும்பும் என கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார்.

உலகக்கோப்பைக்கு ரியலான போட்டி அணியாக ஆஸ்திரேலியா திரும்பும்- கேரி கிர்ஸ்டன்

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த அணியாக விளங்கி வருவது ஆஸ்திரேலியா. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அந்த அணிக்கு சோதனையுடன் மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டது. கேப்டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டின்போது பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார்.

ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிடாதீர்கள்..!! உலகக்கோப்பைக்கு முரட்டு தனமான அணியாக வருவார்கள் - கேரி கிரிஸ்டன் எச்சரிக்கை 1
SYDNEY, NEW SOUTH WALES – MARCH 29: An emotional Steve Smith is comforted by his father Peter as he fronts the media at Sydney International Airport on March 29, 2018 in Sydney, Australia. Steve Smith, David Warner and Cameron Bancroft were flown back to Australia following investigations into alleged ball tampering in South Africa. (Photo by Brook Mitchell/Getty Images)

இதற்கு வார்னர்தான் முக்கிய காரணம் என்று தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து பேட்டியளிக்கையில் கேப்டன் ஸ்மித், தனக்கு இந்த சம்பவம் குறித்து தெரியும் என அதிர்ச்சிகரமான செய்தியை கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோருக்கு ஒரு வருடம் தடைவிதித்தது. இதனால் முன்னணி வீரர்களான இருவரும் ஒரு வருடம் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

Cricket, Steve Smith,
பந்தை சேதப்படுத்தும் சம்பவத்தில் டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஈடுபடுவது முதல்முறை அல்ல, ஏற்கெனவே உள்நாட்டு போட்டிகளில் இதுபோல் செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்று போட்டி நடுவர் டேர்ல் ஹார்பர் பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், பந்தை சேதப்படுத்தியது என்ற நீங்காத கரையில் இருந்து திரும்பி, ரியலான உலகக்கோப்பை போட்டியாளராக மீண்டு வருவார்கள் என்று தென்ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார்.

இதுகுறித்து கேரி கிர்ஸ்டன் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா எந்தவொரு மிகப்பெரிய தொடரில் இருந்தும் விலகுவதை உங்களால் பார்க்க முடியாது. மிகப்பெரிய தொடர்களில் அந்த அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணிகளில் ஒன்று. அடுத்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் சரியான போட்டி கொடுக்கும் அளவிற்கு தயாராவார்கள் என்பது உறுதி’’ என்றார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *