3ஆவது ஒரு நாள் போட்டி , டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு!!

மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடந்த முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் முறையே இந்திய அணி 26 ரன், 50 ரன் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒரு நாள் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

இந்தியா: ரோகித் சர்மா, ரஹானே, விராட் கோலி (கேப்டன்), மனிஷ் பாண்டே, கேதர்ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ்,  பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், நாதன் கவுல்டர் நிலே, ஆஷ்டன் அகர் , பேட் கம்மின்ஸ், கனே ரிச்சர்ட்சன்.

Editor:

This website uses cookies.