19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் மலேசியாவில் வரும் நவம்பர் 9 முதல் 20 ஆம் தேதி வரை நடக்கிறது. இத்றகான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
கடந்த முறை நடந்த அண்டர் 19 ஆசியக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது கோப்பையை தக்க வைக்க இந்திய அணி முனைப்புடன் செல்லும்.
இந்த அண்டர் 19 அணிக்கு முன்னாள் இந்திய வீரர் ராகுல் ட்ராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருட தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்துகொள்ளும். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மேலும், நேபாளம் மற்றும் ஹாங் காங் ஆகிய அணிகள் தகுதிச் சுற்றுக்கள் மூலம் தேர்வாகியுள்ளன. இன்னும் இரண்டு அணிகளின் தேர்விற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அணியில் முன்னர் இருந்த கேப்டன் பிரித்திவ் சாவிற்கு பதிலாக ஹிமான்சு ரானா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்திவ் சா ரஞ்சி கோப்பை தொடர்களில் கவனம் செலுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், துணைக் கேப்டனாக அபிசேக் சர்மா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி : ஹிமான்சு ரானா (கேப்டன்), அபிசேக் சர்மா(துணைக் கேப்டன்), அதர்வா திரிவேதி, மனோஜ் கல்ரா, சல்மான் கான், அனுஜ் ராவட், ஹர்விக் தேசாய், ரியான் பராக், அங்குல் ராய், சிவ சிங், டனுஷ் கோட்டியன், தர்சன் நல்கண்டே, விவேகானந்த திவாரி, அதித்யா தாக்கரே, மந்தீப் சிங்
தற்போது மலேசியாவில் நடக்கவுள்ள இந்த தொடர் முன்னர் இந்தியாவின் பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவிற்கு தங்கள் அணியை அனுப்ப மறுத்து விட்ட காரணத்தினால் தொடருக்கான இடம் மாற்றப்பட்டுள்ளது.
India U19 team for Asia Cup announced. The 4th edition of the tournament is set to be played in Malaysia from November 9-20 pic.twitter.com/9p5SOBjWSw
— BCCI (@BCCI) October 16, 2017
இது 4ஆவது அண்டர் 19 ஆசியக் கோப்பை ஆகும். சென்ற முறை நடந்த ஆசியக் கோப்பையை இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 32 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.