கோலி – அனுஷ்கா சர்மா இடையே திருமணம் கடந்த 11ம் தேதி இத்தாலியில் நடைப்பெற்றது. அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் டிசம்பர் 21 மற்றும் 26ம் தேதி நடைப்பெற உள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் பிரபலங்களான கோலி – அனுஷ்கா ஏன் இங்கே திருமணம் செய்யாமல், இத்தாலியில் சென்று திருமணம் செய்துகொள வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ பன்னாலால் சாக்யா குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக எம்.லே.ஏ., பன்னாலால் சாக்யா, குற்றச்சாட்டு :
திறன் இந்தியா நிகழ்ச்சியில் பேசிய பாஜக எம்.லே.ஏ., பன்னாலால் சாக்யா, ‘’இந்த நாட்டில் தான் ராதா, கிருஷ்ணர், விக்ரமாதித்யா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இந்தியாவில் புகழையும், பணத்தையும் சம்பாதிக்கும் விராட் போன்றவர்கள் வெளிநாட்டுக்கு சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். என கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் கோலி – அனுஷ்கா இந்தியர்கள். இருப்பினும் அவர்களின் வாழ்க்கையில் முக்கிய நாளான திருமணம் எங்கு நடத்த வேண்டும் என அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். அவர்கள் ஒன்று சம்பாதித்த அனைத்தையும் வெளிநாட்டில் கொண்டு போட்டு விடவில்லை. மேலும் திறன் இந்தியா எனும் மத்திய அரசால் நடத்தப்படும் இளைஞர்களுக்கான பயிற்சி கொடுக்கும் நிகழ்ச்சியில் இது போன்ற பேச்சுக்கள் தேவையில்லாதது என பன்னாலாலுக்கு எதிராக கருத்து எழுந்துள்ளது.
இந்நிலையில் கோலி – அனுஷ்கா இந்தியர்கள். இருப்பினும் அவர்களின் வாழ்க்கையில் முக்கிய நாளான திருமணம் எங்கு நடத்த வேண்டும் என அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். அவர்கள் ஒன்று சம்பாதித்த அனைத்தையும் வெளிநாட்டில் கொண்டு போட்டு விடவில்லை. மேலும் திறன் இந்தியா எனும் மத்திய அரசால் நடத்தப்படும் இளைஞர்களுக்கான பயிற்சி கொடுக்கும் நிகழ்ச்சியில் இது போன்ற பேச்சுக்கள் தேவையில்லாதது என பன்னாலாலுக்கு எதிராக கருத்து எழுந்துள்ளது.