கிரிக்கெட் போட்டியில் இதை விட பெரிய போட்டி இல்லை, ஆமாம், நாம் இந்தியா பாகிஸ்தான் போட்டியை பற்றி தான் பேசுகிறோம்.
இரண்டு அணியுமே இந்த சாம்பியன்ஸ் டிராபியில் முதல் போட்டியில் விளையாட போகிறது, இதனால் ரசிகர்களுக்கு சந்தோசம் அதிகரித்து கொண்டே உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு நடந்த பயிற்சி போட்டிகளில் நியூஸிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று இந்திய வலுவான நிலையில் உள்ளது.
இந்த சாம்பியன்ஸ் டிராபியில் நேருக்கு நேராக பார்த்தால், பாகிஸ்தானின் கை தான் ஓங்கி இருக்கிறது. 2004 மற்றும் 2009 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்த, 2013 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. இதனால், 2-1 கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலையில் இருக்கிறது.
சமீபத்திய பார்ம்:
2015 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி ஒருநாள் போட்டிகளை அதிகமாக விளையாடவில்லை. ஆனால், விராட் கோலியின் தலைமையில் உள்ள இந்திய அணி செம்ம பார்மில் உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை, 2-1 என்ற கணக்கில் வென்றது.
அந்த தொடரில் யுவராஜ் சிங் 150 அடித்து இங்கிலாந்தின் பந்துவீச்சை சின்னாபின்னம் ஆக்கினார். இந்தியாவிற்காக ஹர்டிக் பாண்டியாவும் சிறப்பாக செயல் பட்டு வருகிறார்.
எதிர்பார்க்கும் அணி:
1. ரோகித் சர்மா
2. ஷிகர் தவான்
3. விராட் கோலி
4. யுவராஜ் சிங்
5. எம்.ஸ். தோனி
6. கேதார் ஜாதவ்
7. ஹர்டிக் பாண்டியா
8. ரவீந்திர ஜடேஜா
9. புவனேஸ்வர் குமார்
10. உமேஷ் யாதவ்
11. ஜேஸ்ப்ரிட் பும்ரா