இரண்டாவது டெஸ்ட்: கபென் ஸ்டோக்ஸ் வெளியே கிரிஸ் வோக்ஸ் உள்ளே.. காரணம் என்ன? 1

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. பிரிஸ்டல் நகரில் நடந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின் மதுபான விடுதிக்கு சென்ற பென் ஸ்டோக்ஸும் ஹேல்ஸும் அங்கு போதையில், இரண்டு பேரை அடித்து உதைத்தனர். வீடியோ, காட்சிகள் வெளியாகி பரபரப்பானது.

இதையடுத்து ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து விசாரணை முடியும் வரை சர்வதேச போட்டிகளுக்கு ஸ்டோக்ஸும் ஹேல்ஸும் பரிசீலிக்கப் படமாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. பின்னர் இந்த வருடம் அவர்கள் அணியில் மீண்டும் இணைந்தனர்.இரண்டாவது டெஸ்ட்: கபென் ஸ்டோக்ஸ் வெளியே கிரிஸ் வோக்ஸ் உள்ளே.. காரணம் என்ன? 2

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நாளை வருகிறது. தான் தவறு ஏதும் செய்யவில்லை என்றும் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஸ்டோக்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் கோர்ட் என்ன நடவடிக்கை என்பதை பொறுத்தே அவர் அணிக்கு திரும்ப முடியும். வழக்கு தள்ளி வைக்கப்பட்டாலும் அவர் அடுத்த போட்டியில் விளையாட முடியும். இதற்கிடையே அவருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட இருக்கிறார்.

லண்டன் லார்டஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி தொடங்க இருக்கும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் பேட்டிங்கிலும் சொதப்பி, கேட்ச்களையும் கோட்டை விட்ட டேவிட் மலானுக்கு பதிலாக இளம் வீரர், ஆலிவர் போப் அறிமுகமாகிறார்.

இரண்டாவது டெஸ்ட்: கபென் ஸ்டோக்ஸ் வெளியே கிரிஸ் வோக்ஸ் உள்ளே.. காரணம் என்ன? 3
முதல் போட்டியில் கலக்கலாகப் பந்துவீசிய பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் அழைக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டோக்ஸ் மீது வழக்கு உள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இதில் இங்கிலாந்து அணி 2 மாற்றங்களைச் செய்துள்ளது.

முதலாவதாக, பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்து, பீல்டிங்கிலும் மோசமாக இருந்த டேவிட் மலானுக்கு பதிலாக உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் 20வயது வீரர் ஆலிவர் போப் வாய்ப்பு பெற்றுள்ளார்.

டேவிட் மலான் இரு இன்னிங்ஸிலும் முறையே 8, 20 ரன்கள் மட்டுமே சேர்த்தார், ஸ்லிப்பில் பீல்டிங் செய்து 3 கேட்சுகளை கோட்டைவிட்டார் என்பதால், அவருக்கு இங்கிலாந்து அணி நிர்வாகம் கல்தா கொடுத்துள்ளது.

அதேசமயம் புதுமுகமாக அறிமுகமாகும் ஆலிவர் போப் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் 684 ரன்கள் சேர்த்துள்ளார். இது 2-வது அதிகபட்சமாகும். மேலும், வலதுகை பேட்ஸ்மேன் என்பதால், இந்திய வீரர் அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொண்டு துவம்சம் செய்ய இவர் அழைக்கப்பட்டுள்ளார்.இரண்டாவது டெஸ்ட்: கபென் ஸ்டோக்ஸ் வெளியே கிரிஸ் வோக்ஸ் உள்ளே.. காரணம் என்ன? 4

அதேசமயம், வேகப்பந்துவீச்சாளர் பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் அழைக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் பிரிஸ்டல் நகரில் ஒரு மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்டார். அது தொடர்பாக அவர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த ஒழுக்கக்குறைவான சம்பவத்தால், இங்கிலாந்து அணியிலும் சில போட்டிகளுக்கு ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நாளை வருகிறது. விசாரணை வேறு ஒரு தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டால், 2-வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அணியில் சேர்க்கப்படுவார். அல்லது விசாரணை நடந்து தண்டனை ஏதும் அளிக்கப்படும் பட்சத்தில் கிறிஸ் வோக்ஸ் அணியில் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *