கரோனா சிகிச்சைக்காக புதிய திட்டத்தை போட்ட கங்குலி: அதிர்ந்த மேற்கு வங்கம் 1
Former cricketer Sourav Ganguly, newly-elected president of the Board of Control for Cricket in India (BCCI), speaks during a press conference at the BCCI headquarters in Mumbai on October 23, 2019. - Former captain Sourav Ganguly was unanimously elected on October 23 as president of India's troubled cricket board, the sport's most powerful body. (Photo by Punit PARANJPE / AFP) (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்காக ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள வீரர்கள் தங்கும் அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என கங்குலி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த வண்ணமே உள்ளது. தற்போது வரை இந்தியா முழுவதும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ நெருங்குகிறது. இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால் ஒவ்வொரு மாநில அரசுகளும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ஏற்ற வகையில் படுக்கைகளை அதிகரித்த வண்ணம் உள்ளன.

கரோனா சிகிச்சைக்காக புதிய திட்டத்தை போட்ட கங்குலி: அதிர்ந்த மேற்கு வங்கம் 2
Sourav Ganguly has offered Eden Gardens’ indoor facility and the players dormitory to the West Bengal government to create a temporary medical facility

மேற்கு வங்காளத்திலும் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒருவேளை சிகிக்சை அளிக்க இடம் தேவை என்றால் ஈடன் கார்டன் மைதானத்தில் வீரர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘அரசு எங்களிடம் கேட்டால், நாங்கள் கொடுப்பதற்காக தயாராக உள்ளோம். இந்த நேரத்தில் இருந்து எது தேவையென்றாலும் அதை செய்ய இருக்கிறோம். இதில் எந்தவித பிரச்சனையும் இல்லை’’ என்றார்.

கரோனா சிகிச்சைக்காக புதிய திட்டத்தை போட்ட கங்குலி: அதிர்ந்த மேற்கு வங்கம் 3
MS Dhoni, captain, of India chats with Sourav Ganguly during the 3rd Paytm Freedom Trophy Series T20 International match between India and South Africa held at Eden Gardens Stadium in Kolkata, India on the 8th October 2015
Photo by Ron Gaunt/ BCCI/ Sportzpics

சவுரவ் கங்கலி பிசிசிஐ தலைவராக பதவி ஏற்பதற்கு முன் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு  எதிரான போராட்டத்திற்கு அரசு தயாராகி வரும் நிலையில், இந்திய ரயில்வே தனது ரெயில் கேபின்களையும், ரெயில் பெட்டிகளையும் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் தனிமை வார்டுகளாகப் பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் பரிசீலனை
நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து அனைத்து ரயில் சேவைகளும் ஏப்ரல் 14 வரை நிறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு ஐ.சி.யுகளாக பயன்படுத்த கரெயில் பெட்டிகள்  மற்றும் கேபின்களை வழங்குவதற்கான திட்டம் குறித்து  ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே. யாதவ் பொது மேலாளர்கள் மற்றும் பிரதேச ரயில்வே மேலாளர்கள் இடையேயான புதன் கிழமை நடைபெற்ற வீடியோ கான்பரன்சிங்கில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *