2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் மைக் கேட்டிங் தெரிவித்துள்ளார்.
உலக கிரிக்கெட் அமைப்புகளில் மிகவும் பெரிய அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பிசிசிஐ) அண்மையில் தேசிய ஊக்குமருத்து தடை அமைப்பின் விதிமுறைகளுக்குள் வந்தது. இது கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. ஏனென்றால் ஒரு விளையாட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற வேண்டும் என்றால் அந்த விளையாட்டு தொடர்பாக உள்ள அமைப்புகள் அனைத்தும் உலக ஊக்கமருத்து தடை அமைப்பின் விதிகளுக்குள் வரவேண்டும்.
இந்நிலையில் கிரிக்கெட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்ப்பது தொடர்பாக எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் மைக் கேட்டிங் ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து அவர், “நாங்கள் கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கும்படி ஐசிசியுடன் கேட்டுக்கொண்டுள்ளோம். இதற்கு ஐசிசியின் புதிய செயல் அதிகாரி மனு சாஹனி இந்த விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளது எனத் தெரிவித்தார். மேலும் வரும் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் தற்போது உடை இடம் பெறாததற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியமும் அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் தான் காரணம். ஏனெனில் 1896 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது ஒலிம்பிக் கமிட்டி.
உலக ஒலிம்பிக் கமிட்டியின் இந்த முயற்சிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியமும் (அப்போது இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்) பல நாடுகளின் தேசிய கிரிக்கெட் வாரியங்களும் முட்டுக்கட்டை போட்டது. ஒலிம்பிக்கில் விளையாட கிரிக்கெட் அழைப்பினை பல நாடுகள் ஏற்க மறுத்தது அதன் பின்னர் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ளூர் அணிகள் மட்டுமே 1900 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டனர்.
இறுதியில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அணிகள் இடையே சில பிரச்சனை ஏற்பட்டு அந்த இரண்டு அணிகளும் வெளியேறினார். கடைசியில் ஒரே ஒரு இரண்டு நாள் போட்டி மட்டுமே நடத்தப்பட்டது. இந்த போட்டியில் கிரேட் பிரிட்டன் அணி வென்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற கிரேட் பிரிட்டன் அணிக்கு தங்கப்பதக்கமும் எந்த இடத்திற்கு வந்த பிரான்ஸ் அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதில் கலந்து கொண்ட இந்த நான்கு அணிகளுமே அந்த நாட்டிற்காக பிரத்தியேகமாக தயாரான அணிகள் கிடையாது.
உள்ளூரில் பயிற்சி பெற்று வந்த கிளப் அணிகள் ஆகும். இவ்வாறு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்ப்பது தொடர்பான பிரச்சனைகள் ஆரம்பமானது. தற்போது வரை இந்த பிரச்சனை நீண்டுகொண்டே போகிறது. மேலும் ஒலிம்பிக் 15 முதல் 20 நாட்கள் நடக்கும் தொடர் ஆகும்.
இதில் பல்வேறு வகையான போட்டிகள் நடைபெறுகிறது. ஆனால் கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய பல்வேறு விதமான போட்டியில் உள்ளது . குறைந்தது ஒரு 20 ஓவர் போட்டி நடக்க வேண்டும் என்றால் மூன்றரை மணி நேரம் தேவை. இந்த கால அளவும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் பத்து ஓவர் அல்லது 100 பந்து போட்டிகள் நடைபெற்றால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது சற்று எளிதாக இருக்கும் என்று தெரிகிறது.