டேவிட் வார்னரை தேடி வரும் சாதனைகள்

ஐபிஎல் தொடரில் பெருமை மிக்க சாதனைகளில் ஒன்றை ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தன்வசமாக்கியுள்ளார்.

பத்தாவது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் நேற்று ப்ளே-ஆப் சுற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மும்பை – புனே அணிகள் மோதின. இதில் புனே அணி மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் இடம்பிடித்தது.

இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் வார்னர் வழக்கம் போல தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சவாலான பந்துவீச்சை கவனமுடன் எதிர்கொண்டு ஆடிய அவர் சீரான வேகத்தில் ரன் சேர்த்துவந்தார். ப்யூஷ் சாவ்லா வீசிய 9வது ஓவரில் மிட் விக்கெட் திசையில் ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 4000 ரன்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.