அஷ்வின் – ரவீந்திர ஜடேஜாவுடன் என்னையும் குல்தீப் யாதவையும் ஒப்பிட வேண்டாம் என இந்திய சுழல் பந்துவீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார்.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. இலங்கை அணியின் சார்பில் உபுல் தரங்காவும், சதீரா சமரவிக்ரமாவும் ஓரளவு நன்றாக விளையாடினர். மற்றவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்து ஆட்டமிழந்தனர்.
இதனால் இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சஹால் தலா 3 விக்கெட்களும், பாண்டியா 2 விக்கெட்டும், பும்ரா, புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர். சஹால் வீசிய 10 ஓவர்களில் 3 மேய்டன் ஓவர்களும் அடங்கும்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தவான், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெற்றது. அய்யர் சிறப்பாக விளையாடி 63 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய தவான் 84 பந்துகளில் சதம் அடித்தார். இந்திய அணி 32.1 ஒவர்களில் 2 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோருடன் என்னையும் குல்தீப்பையும் ஒப்பிட வேண்டாம்’ என்று சேஹல் கூறினார்.
இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியின் தவான் சதம் அடித்தார். சுழற்பந்து வீச்சாளர்கள் சேஹல், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர்.
போட்டிக்குப் பின் பேசிய சேஹல், ‘என்னையும் குல்தீப் யாதவையும் அஸ்வின், மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் ஒப்பிடுகிறார்கள். அது சரியானதாக இருக்காது. அவர்கள் பல்வேறு தொடர்களில் விளையாடி இருக்கிறார்கள். நாங்கள் நான்கு, ஐந்து தொடர்களில் மட்டுமே ஆடியிருக்கிறோம். அதோடு வெளிநாடுகளில் நாங்கள் விளையாடியதில்லை. இலங்கையில் மட்டுமே ஆடியிருக்கிறோம். அந்த நாட்டின் தன்மை நமது நாடு மாதிரிதான் இருக்கும் என்பதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. அதனால் அவர்களை எங்களுக்கும் ஒப்பிடுவது சரியாக இருக்காது. அணியின் வெற்றிக்கு உதவுவது மட்டுமே எங்களது நோக்கம். இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, பயமில்லாமல் தைரியமாக பந்துவீசச் சொன்னார். அதன்படியே வீசினேன். இந்தப் போட்டியில், மேத்யூஸ் விக்கெட்டை வீழ்த்தியதை சிறப்பானதாக கருதுவேன். பந்து சுழன்று சென்று விக்கெட்டை தாக்கியது. தொடர்ந்து இதுபோன்று சிறப்பாக பந்துவீசுவேன்’ என்றார்.