எங்க ஆளுங்க வந்த நீங்க காலிடா... எச்சரிக்கும் ஹேசல்வுட் 1

நான்கு போட்டிகள் கொண்ட இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடுமையானதாக இருக்கும் என ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.

மூம்மூர்த்திகள் இல்லாததால் எங்களை சாதாரணமாக எடை போடாதீர்கள்- ஹசில்வுட் எச்சரிக்கை
இந்திய டெஸ்ட் அணி இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்றது கிடையாது. வார்னர், ஸமித், பான்கிராப்ட் இல்லாத அந்த அணியை இந்தியா இந்த முறை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Cricket, Steve Smith,
பந்தை சேதப்படுத்தும் சம்பவத்தில் டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஈடுபடுவது முதல்முறை அல்ல, ஏற்கெனவே உள்நாட்டு போட்டிகளில் இதுபோல் செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்று போட்டி நடுவர் டேர்ல் ஹார்பர் பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான தொடர் மிகவும் கடுமையானதாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக வருகிற தொடர் மிகவும் கடுமையானதாக இருக்கப்போகிறது. எப்போதுமே கடுமையானதாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் எங்கள் மண்ணில் அவர்களை துவம்சம் செய்திருக்கிறோம். ஆனால், இந்த முறை அவர்கள் எங்களுக்கு அதிர்ச்சி கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக நினைக்கிறார்கள்.எங்க ஆளுங்க வந்த நீங்க காலிடா... எச்சரிக்கும் ஹேசல்வுட் 2

எங்களது அணியில் ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராப்ட் இல்லாததால் வீக்கான அணி என்று நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் சிறந்த அணியாக உருவெடுக்க முயற்சி செய்வோம். எங்களுடைய மண்ணில் விளையாடும்போது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் நடைபெற்ற தொடரிலேயே நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம்.

எங்க ஆளுங்க வந்த நீங்க காலிடா... எச்சரிக்கும் ஹேசல்வுட் 3
CAPE TOWN, SOUTH AFRICA – MARCH 24: Steven Smith (capt) of Australia during day 3 of the 3rd Sunfoil Test match between South Africa and Australia at PPC Newlands on March 24, 2018 in Cape Town, South Africa. (Photo by Ashley Vlotman/Gallo Images/Getty Images)

தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால், இறுதியில் 1-2 என தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்கள் மண்ணில் அவர்களை ஒருவழி செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *