துலீப் டிராபி 2017-இன் முதல் போட்டியில் தமிழக வீரர் அபினவ் முகுந்த் விளையாடமாட்டார் என்று தகவல் வந்துள்ளது. அவருக்கு உடல்நலம் சரியில்லாததால், அவர் இன்னும் அணியுடன் இணையவில்லை. டெங்கு காய்ச்சலால் அவதி படும் முகுந்த் இந்த தொடரில் பங்கேற்காமல் இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. முகுந்துக்கு பதிலாக 17 வயது மும்பை இளம் வீரர் ப்ரித்திவ் ஷாவை அணியில் சேர்க்கப்பட்டது.
அபினவ் முகுந்த் அணியில் இல்லாத காரணத்தினால் அவருக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்படுவார். செப்டம்பர் 7 அன்று இந்தியா பச்சை அணிக்கு எதிராக லக்னோ மைதானத்தில் தினேஷ் கார்த்திக்கின் அணி களமிறங்கவுள்ளது.
அபினவ் முகுந்த் அணியில் இல்லாத காரணத்தினால் அவருக்கு பதிலாக சுதீப் சட்டர்ஜீ தொடக்கவீரராக களமிறங்குவார். அம்பதி ராயுடு அல்லது பாபா இந்திராஜித் அணியில் விளையாட வாய்ப்புள்ளது.
இந்தியா சிவப்பு அணி: அபினவ் முகுந்த், பிரியங் பஞ்சால், சுதீப் சட்டர்ஜீ, இஷாங் ஜக்கி, அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், பாபா இந்திராஜித், கெளதம், கரண் ஷர்மா, பசில் தம்பி, தவால் குல்கர்னி, அசோக் டிண்டா, ராகுல் சிங், சிவி மிலிந்