இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா இரண்டாவது டி20 : யுவராஜ் சாதனையை முறியடித்தார் டி வில்லியர்ஸ்

தற்போது இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டி 20 போட்டிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

மொத்தம் நடந்த இரண்டு டி20 போட்டிகளில் இங்கிலாந்து ஒரு வெற்றியும் தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றியும் பெற்று தொடரை சமன் செய்தது.

இன்று இரண்டாவது டி20 போட்டிகள் நடந்தது இதில் தென் ஆப்பிரிக்கா அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தார்கள் இதில் அதிக பட்சமாக டி வில்லியர்ஸ் 46 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி பந்து வீச்சு தரப்பில் டாம் குர்ரான் 33 ரன்கள் குடுத்து 3 விக்கெட்களை எடுத்தார்.

பிறகு களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தார்கள் இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக ஜேசன் ராய் 67 ரன்கள் அடித்தார்.தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தரப்பில் கிறிஸ் மோரிஸ் 18 ரன்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் தோல்வி அடைந்தார்கள்.இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதன் மூலம் 1-1 என தொடரை சமன் செய்தார்கள்.

Cricket – England vs South Africa – Second International T20 – Taunton, Britain – June 23, 2017 South Africa’s AB de Villiers in action Action Images via Reuters/Andrew Couldridge – RTS18DQZ

ஆட்டத்தின் புள்ளிவிவர சிறப்பம்சங்கள் சில இங்கே உள்ளன :

  • ஜேசன் ராய் T20 சர்வதேச போட்டியில் களத்தை தடுத்ததால் முதல் வீரராக வெளியேற்ற பட்டார்.இந்த முறையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெளியேறிய மூன்றாவது இங்கிலாந்து வீரர் ஆனார்.

 

  • 3 ரன்கள் வித்தியாசத்தில் இன்று தோல்வி அடைந்ததால் இது போன்று குறைந்த ரன்களில் தோல்வி அடைந்ததில் இதுவே இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது முறை ஆகும்.இதற்கு முன்னாள் இலங்கை அணியிடம் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளார்கள்.

 

  • டி வில்லியர்ஸ் இதுவரை 7 முறை 30+ ரன்களை 200+ ஸ்ட்ரைக் ரேட்டிற்கு மேல் அடித்து உள்ளார் இந்த சாதனையில் தற்போது டி வில்லியர்ஸ் தான் முதல் இடத்தில் உள்ளார்.இதற்கு முன்னதாக யுவராஜ் சிங் 6 முறை 30+ ரன்களை 200+ ஸ்ட்ரைக் ரேட்டிற்கு மேல் அடித்து உள்ளார்.

 

  • இந்த போட்டியில் டி வில்லியர்ஸ் 230 ஸ்ட்ரைக் ரேட்டி வைத்து இருந்தார்,30 ரங்களுக்கு மேல் அடித்து 200+ ஸ்ட்ரைக் ரேட் வைத்து இருந்த வீரர்களில் டி வில்லியர்ஸ் 5வது வீரர் ஆவர்.

 

  • 18 வருடத்திற்கு பிறகு இன்று தான் டான்டனில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடந்து உள்ளது. இந்தியாவில் மட்டும் தான் அதிக முறை டி 20 போட்டிகள் நடத்த பட்டு உள்ளது.

 

  • இதற்க்கு முன்னாள் 1999ஆம் ஆண்டு டான்டனில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த பட்டது இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது.

 

  • தென் ஆப்பிரிக்கா அணியில் யாருமே 50 ரன்கள் கூட அடிக்காமல் இருந்த நிலையில் 178 ரன்கள் எடுத்தார்கள் இது போன்று அவர்களுக்கு 8 முறை நடந்து உள்ளது.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.