பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக், சமீபத்தில் ஹர்திர் பாண்ட்யாவுக்கு பயிற்சி அளிக்க விரும்பவதாக கூறி பேசிப் பொருளாகியிருந்தார். இப்போது மீண்டும் இன்னொரு முறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தால் டிவி ஒன்றில் பேசிய அவர் தனக்கு திருமணத்துக்கு பிறகு 5-6 பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறியுள்ளார். இந்த உறவுகளுக்கு காலாவதிக் காலமும் உள்ளது என்று கூறியுள்ளார். 39 வயதான இவர், “சில உறவுகள் ஒரு வருடம் வரை நீடித்துள்ளது, இன்னும் சில உறவுகள் ஒன்றரை வருடம் வரையும் நீடித்துள்ளது” என்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் உறுதி செய்யும் விதமாக மீண்டும் இந்த உறவுகள் திருமணத்துக்கு பிறகானதா என்று கேட்க, பாகிஸ்தான் வீரர் ஆம் என்று கூறி உறுதி செய்தார்.
சமீபத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவை உலகத்திலேயே சிறந்த ஆல் ரவுண்டர் ஆக்க முடியும் என்று கூறினார்.
Former Pakistan all-rounder Abdul Razzaq stating that he had 5-6 extramarital affairs (video courtesy Aap News) pic.twitter.com/GP0dOSQELa
— Saj Sadiq (@Saj_PakPassion) July 17, 2019
உலகக் கோப்பையில், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான லீக் போட்டி முடிந்தவுடன், பாண்ட்யாவின் ஆட்டத்தில் சில பலவீனங்கள் உள்ளன, அதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று ரசாக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அப்துல் ரசாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நான் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை கூர்ந்து கவனித்து வருகிறேன். அவர் பந்தை ஆடுகளத்தில் மிகவும் கடுமையாக ஹிட் செய்யும்போது உடலை பேலன்ஸ் செய்யும்போது பல தவறுகள் உள்ளது.
அவரது கால்களின் நிலையை பார்க்கும்போது, அது சில நேரங்களில் அவரை கீழே தள்ளிவிடுகிறது. அவருக்கு என்னால் பயிற்சி அளிக்க முடியும் என்று உணர்கிறேன். இந்தியா – பாகிஸ்தான் இடையே அரசியல் தொடர்பான பிரச்சனை இருப்பதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பயிற்சி கொடுக்கலாம்.
ஹர்திக் பாண்டியாவை என்னால் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக மாற்ற முடியும். பிசிசிஐ அவரை சிறந்த ஆல்ரவுண்டராக்க விரும்பினால், பயிற்சியளிக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ரசாக், 265 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5,080 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று சதங்களும், 23 அரைசதங்களும் குவித்துள்ளார். இதுவரை அவர் 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் அவர் 6/35 என்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.