திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகல்! ரசிகர்கள் கவலை! புதிய கேப்டன் யார்? 1

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ்.

எனினும் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த முடிவை எடுப்பது கடினமாக இருந்தது. அதேசமயம் புதிய கேப்டன் குயிண்டன் டி காக்குக்கு முழு ஆதரவை வழங்குகிறேன். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் தொடர்ந்து விளையாடவுள்ளேன். அணியின் வெற்றிகளுக்குப் பங்களிக்கவுள்ளேன் என்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார் டு பிளெஸ்ஸிஸ்.

தென் ஆப்பிரிக்க அணிக்காக 36 டெஸ்டுகளில் தலைமையேற்ற டு பிளெஸ்ஸிஸ், 18-ல் வெற்றி பெற்றும் 15-ல் தோல்வியும் அடைந்துள்ளார். டு பிளெஸ்ஸிஸ் தலைமையில் விளையாடிய 39 ஒருநாள் ஆட்டங்களில் 28-லும் 37 டி20 ஆட்டங்களில் 23-லும் வெற்றி அடைந்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகல்! ரசிகர்கள் கவலை! புதிய கேப்டன் யார்? 2

டு பிளெஸ்ஸிஸுக்கு அடுத்ததாக குயிண்டன் டிக் காக், தென் ஆப்பிரிக்க டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.

தென்ஆப்பிரிக்கா அணியின் பவுமா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 7.4 ஓவரில் 84 ரன்கள் எடுத்திருக்கும்போது டி காக் 24 பந்தில் 35 ரன்கள் சேர்த்தார். பவுமா 24 பந்தில் 49 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின் வந்த கிளாசன் 33 பந்தில் 66 ரன்களும், டேவிட் மில்லர் 20 பந்தில் 35 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.

திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகல்! ரசிகர்கள் கவலை! புதிய கேப்டன் யார்? 3
South Africa’s Faf du Plessis is caught out during the ICC Cricket World Cup group stage match at Lord’s, London. (Photo by Nigel French/PA Images via Getty Images)

பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜேசன் ராய் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து பட்லர் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. பட்லர் 29 பந்தில் 57 ரன்களும், பேர்ஸ்டோவ் 34 பந்தில் 64 ரன்களும் குவித்தனர்.

கேப்டன் இயன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 22 பந்தில் 7 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாச இங்கிலாந்து 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து 2-1 எனக் கைப்பற்றியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *