இந்திய அணியில் இந்த இருவரும் தான் எங்களுக்கு பயம் காட்டுவார்கள்: பாப் டு ப்லெசிஸ் ஓப்பன் டாக் 1
South Africa's Faf du Plessis gestures to a teammate during day two of the first cricket test match between South Africa and Pakistan at Centurion Park in Pretoria, South Africa, Thursday, Dec. 27, 2018. (AP Photo/Themba Hadebe)

ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால்?… அவ்வளவுதான் என இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் டு பிளிசிஸ்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. கடந்த முறை தென்ஆப்பிரிக்கா இந்தியாவில் விளையாடும்போது ஆடுகளங்கள் முதல் ஓவரில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

டி வில்லியர்ஸ், டு பிளிசிஸ், அம்லா போன்ற ஜாம்பவான்களே கடுமையாக திணறினார்கள். அரைசதம் அடித்தாலே மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது. இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா விக்கெட்டுக்களை அள்ளினர். அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர்களால் சாதிக்க முடியவில்லை.

இந்திய அணியில் இந்த இருவரும் தான் எங்களுக்கு பயம் காட்டுவார்கள்: பாப் டு ப்லெசிஸ் ஓப்பன் டாக் 2
ADELAIDE, AUSTRALIA – DECEMBER 07: Virat Kohli and Ravichandran Ashwin appeal for the wicket of Usman Khawaja of Australia during day two of the First Test match in the series between Australia and India at Adelaide Oval on December 07, 2018 in Adelaide, Australia. (Photo by Quinn Rooney/Getty Images)

ஆனால் இந்த முறை இடது கை சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகாராஜ்-யை மிகப்பெரிய ஆயுதமாக உபயோகிக்க தென்ஆப்பிரிக்கா தயாராக உள்ளது.

வேகப்பந்து வீச்சை நாங்கள் முதுகெலும்பாக கொண்டுள்ளோம். ஒருவேளை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்போம் என டு பிளிசிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘கடந்த தொடரில் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. எங்களுடைய சுழற்பந்து வீச்சாளரான மகாராஜ், உலகளில் உள்ள சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார். ஆகவே, சுழற்பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளம் கொடுக்கப்பட்டால் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு அவர் கடும் சவாலாக திகழ்வார்.

இந்திய அணியில் இந்த இருவரும் தான் எங்களுக்கு பயம் காட்டுவார்கள்: பாப் டு ப்லெசிஸ் ஓப்பன் டாக் 3
BIRMINGHAM, ENGLAND – AUGUST 03: India’s Ravindra Jadeja during day three of the Specsavers Test Series between England and India at Edgbaston Cricket Ground on August 03, 2018 in Birmingham, England. (Photo by Visionhaus/Getty Images)

நாங்கள் எப்போதுமே வேகப்பந்து வீச்சை பலமாக கொண்டவர்கள். ஆனால், துல்லியமான வேகத்தால் அதை உறுதி செய்வது முக்கியமானதாகும்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *