அறிமுகமாகி ஐந்து வருஷத்துல புவனேஷ்வர் பண்ண அபூர்வ சாதனை!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் விசித்திர சாதனை படைத்தார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநால் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் நடக்கிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் விசித்திர சாதனை படைத்தார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநால் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் நடக்கிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதில் நியூசிலாந்தின் முன்ரோ, நிகோல்ஸ் ஆகியோரை புவனேஷ்வர் குமார் போல்டாக்கினார். இதன் மூலம் ஒருநாள் அரங்கில் முதல் முறையாக இரண்டு வீரர்களை போல்டாக்கினார். கடந்த 2012ல் இந்திய அணிக்காக அறிமுகமான இவர், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இரண்டு வீரர்களை போல்டாக்கியுள்ளார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.