ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பில் ஹக்ஸ், ஒரு பவுன்சரால் தலையின் பின்புறம் அடி பட்டு நம்மை விட்டு பிரிந்து மூன்று வருடத்திற்கு ஆகிறது.
நேரம் இப்படிதான் எதையும் நன்றாக செய்யாது என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மற்றும் பில் ஹக்சின் அணி வீரர் மைகேல் கிளார்க் கூறினார்.
“உண்மையை சொல்ல போனால், நான் தினமும் அவரை பற்றி நினைப்பேன். என் வீட்டை சுற்றி நிறைய பொருட்கள் உள்ளன, அது தினமும் அவரின் ஞாபகத்தை வரவைக்கும். இதனால், அவர் பிறந்த நாள் என்றாலும் இறந்த நாள் என்றாலும் எனக்கு ஒரு வித்தியாசமும் இருக்காது,” என மைகேல் கிளார்க் கூறினார்.
கைக்கடிகாரம் கம்பெனி ஹுப்லோட்டுக்கு அம்பாசிடராக இருக்கும் மைகேல் கிளார்க், அந்த சங்கத்துடன் ஆஷஸ் தொடருக்காக சிட்னியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு வந்திருந்தார்.
“அவர் இறந்து போன அதே சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தான் நான் இருக்கிறேன். எல்லாம் நேரம் தான் என மக்கள் சொல்கிறார்கள். ஆனால், நேரம் ஒன்று செய்யவில்லை. நான் அவரை தினமும் நினைப்பேன்,” என கிளார்க் கூறினார்.
“நாங்கள் ஒன்றாக இருந்த நேரத்தில் சந்தோசமாக இருக்க நினைப்போம். நாங்கள் சந்தோசமாக இருந்தது, பார்ட்டிக்கு சென்றது, காபீ குடிக்க சென்றது, உணவு உன்ன சென்றது என தினமும் ஒவ்வொன்றை நினைப்பேன். இந்த நியாபகங்கள் தான் என்னை தினமும் சந்தோசமாக வைத்து கொள்கிறது,” என கிளார்க் மேலும் கூறினார்.
இது கஷ்டமாக இருந்தாலும், அவருடைய மனைவி மற்றும் குழந்தையுடன் இருந்தால் சந்தோசமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த வாரம் அவருடைய குழந்தை பிறந்தநாளுக்கு நெருங்கிய நண்பர் மற்றும் உறவினர்களை மட்டும் தான் அழைத்தார்.