காம்பீரை நாங்கள் கழட்டி விட வில்லை… கொல்கத்தா நிர்வாகி அதிர்ச்சி தகவல் !!
காம்பீர் தான் தன்னை கொல்கத்தா அணியில் எடுக்க வேண்டாம் என்று கூறியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் CEO தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.
இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இதில் சென்னை அணி தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜாவை தக்க வைத்ததை போல், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான மூன்று வீரர்கள் தக்க வைத்து கொள்ள பி.சி.சி.ஐ., வாய்ப்பு வழங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்து தக்க வைத்தனர். இதில் இரண்டு முறையை கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான கவுதம் காம்பீர் அந்த அணி தக்க வைக்காமல், அணியில் இருந்து விடுவித்தது. இவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தின் மூலம் தனது அணியில் எடுத்து கொண்டது.
கொல்கத்தா அணியின் இந்த முடிவு அதன் ரசிகர்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காம்பீர் தான் தன்னை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்று கூறியதாக கொல்கத்தா அணியின் CEO தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கொல்கத்தா அணியின் CEO, காம்பீர் தனது சொந்த ஊர் அணியான டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக வரும் காலங்களில் விளையாட விருப்பப்பட்டதாகவும் அதன் காரணமாகவே தன்னை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்குமாறும், ஏலத்திலும் விலை கொடுத்து எடுத்துவிட வேண்டாம் என்று காம்பீரே வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக காம்பீரும், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை டெல்லி அணியில் தான் நிறைவு பெற வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.