ஹர்திக் பாண்டியா செய்த ஒரே நல்ல விஷயம் மும்பை அணியிலிருந்து வெளியேறியது தான் ; முன்னாள் நியூசிலாந்து வீரர் சொல்கிறார் !!

ஹர்திக் பாண்டியா செய்த ஒரே நல்ல விஷயம் மும்பை அணியிலிருந்து வெளியேறியது தான் ; முன்னாள் நியூசிலாந்து வீரர் சொல்கிறார் ..

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லதாக அமைந்து விட்டது என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.

2021 ஐபிஎல் தொடர் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கோர் வீரர்களில் ஒருவராக வலம் வந்த நட்சத்திர ஆல்ட்ரவுண்ட் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக பந்து வீச முடியவில்லை என்பதால் மும்பை அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார்.

பின்பு 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா தன்னுடைய அபாரமான பந்துவீச்சு மற்றும் புத்திசாலித்தனமான கேப்டன்ஷிப் மூலம் குஜராத் அணிக்கு டைடல் பட்டத்தை வென்று அனைவரது பாராட்டையும் பெற்றார்.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரிலும் மிகச் சிறந்த முறையில் குஜராத் அணியை வழிநடத்தி வருவதோடு தன்னுடைய பங்களிப்பையும் சிறப்பாக கொடுத்து, குஜராத் அணி 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பதற்கு மிகப் பெரும் காரணமாக திகழும் ஹர்திக் பாண்டியாவை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே பாராட்டி வருகிறது.

குறிப்பாக நடந்து முடிந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிக சிறந்த முறையில் கேப்டன்ஷிப் செய்து வெற்றி பெற்ற ஹர்திக் பாண்டியாவை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் வெகுவாக பாராட்டி வருவதொடு அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டவுல், மும்பை அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீங்கி வந்தது தான் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு நல்ல விஷயமாக அமைந்துள்ளது என வெளிப்படையாக செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அதில், “மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறியதுதான் ஹர்திக் பாண்டியா மற்றும் கிருனால் பாண்டியாவிர்க்கு நல்ல விடிவுகாலமாக அமைந்துள்ளது. இதனால் அவர்கள் போட்டியில் தலைமைத்துவம் பொருந்தி செயல்படுகின்றனர். கிருனால் பாண்டியா அணியின் கேப்டன் இல்லை என்றாலும் அவர் லக்னோ அணியின் தலைமைத்துவம் பொருந்திய ஒரு வீரராக செயல்படுகிறார். குறிப்பாக ஹர்திக் பாண்டியா எப்பொழுதும் அணியை எப்படி வழி நடத்த வேண்டும் கேப்டன்ஷிப் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஹர்திக் பாண்டியா ஒரு மிகச் சிறந்த கேப்டனாகவும் அதிரடியான கிரிக்கெட் வீரராகவும் உள்ளார், அவர் ஒவ்வொரு போட்டியிலும் வளர்ந்து கொண்டே வருகிறார். நிச்சயம் லிமிடெட் ஓவர் தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது” என்று சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.

Mohamed Ashique:

This website uses cookies.