400 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விளையாடிய யுவராஜ் சிங்கை வாழ்த்திய ஹேஸல் கீச்

சர்வதேச கிரிக்கெட்டில் 400 போட்டிகளில் விளையாடியதற்க்காக தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் மனைவி ஹேஸல் கீக்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக விளையாடி வருகிறார் நேற்றைய ஆட்டத்தில் விளையாடிய யுவராஜ் சிங் இதுவரை 400 சர்வ தேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

யுவராஜ் சிங்கின் வாழ்க்கை கதையை பற்றி நாம் அனைவருக்கும் தெரியும்.இந்திய அணியில் மிகவும் திறமை வாய்ந்த வீரர்களின் ஒருவர் தான் யுவராஜ் சிங் இவரின் சில சாதனைகளை இன்னும் யாராலையும் முறியடிக்க முடியாமல் இருக்கிறது.அதில் ஒரு சாதனை தான் குறைந்த பந்துகளில் உலக கோப்பை டி20 போட்டியில் யுவராஜ் அரை சதம் அடித்தது .

2011 உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி உள்ளார் அதில் இவர் பேட்டிங் பௌலிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை பெற்றார்.இதில் ஆச்சிரியம் என்னவென்றால் அந்த உலக கோப்பை போட்டியின் பொது யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்க பட்டு இருந்தார்.

யுவராஜ் சிங் புற்று நோயில் இருந்து திரும்பி வந்ததே பெரிய விஷயம் தான் அது ஒரு கடவுளின் செயல் என்று தான் கூறவேண்டும்.

அதற்க்கு பிறகு அவர் மீண்டும் இந்திய அணியில் விளையாடுவது பெரிய விஷயம் தான் இது போன்று தன்னம்பிக்கைகளி கொண்டவர் யுவராஜ் சிங் மட்டும் தான்.

தற்போது அவர் இந்திய அணிக்காக 400வது ஒரு நாள் போட்டியில் விளையாடி உள்ளார் இதனை அவரின் மனைவி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியது :

சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், முகமது அசாருதின் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் 300 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்குப் பிறகு இந்த மாத தொடக்கத்தில் யுவராஜ் சிங் ஐந்தாவது இந்திய வீரர் ஆனார்.

யுவராஜ் தனது 300 ஆவது ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் அவர் 400வது சர்வதேச கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தது இந்த 400வது போட்டியை மறக்க முடியாத போட்டியாக மாற்றுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் சிறப்பாக விளையாடி கொண்டு இருந்தது அப்போது 168 ரங்களில் 2 விக்கெட் இழப்பிற்கு இருந்தது அப்போது யுவராஜ் சிங் களத்திற்கு விளையாட வந்தார் ஆனால் யுவராஜ் 10 பந்துகள் பிடித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்து அனைவருக்கும் ஏமாற்றத்தையே கொடுத்தார்.

தற்போது இந்திய அணி வரும் ஜூன் 25இல் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.

 

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.