நான் இவனுகலோடதான் உக்காந்து சரக்கடிப்பேன்: ஓப்பனாக போட்டுடைத்த ரவி சாஸ்திரி 1

இந்தியாவில் நீண்ட லாக் டவுனுக்கு பின் மத்திய மாநில அரசுகள் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மதுவுக்கும் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளருக்கும் எந்த அளவு தொடர்பு உள்ளது என்பது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அவர உச்சகட்டமாக செய்த கேலி, கிண்டல் மூலமாகவே தெளிவாக தெரியும்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, நாளை உடனடியாக தனது பாட்னர்ஸ் உடன் பீர் குடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் ஆரஞ்சு பகுதியில் உள்ளதால் மதுக்கடைகளுக்கு வெளியே உள்ள நீண்ட வரிசைகளையும் தாண்டி தனக்கு மது கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் இவனுகலோடதான் உக்காந்து சரக்கடிப்பேன்: ஓப்பனாக போட்டுடைத்த ரவி சாஸ்திரி 2
இதுகுறித்து சாஸ்திரி கூறுகையில், “தற்போது லாக் டவுன் நிலையில் அனைவரும் உள்ளோம். முன்பு நான் சிவப்பு மண்டலத்தில் இருந்தேன். ஆனால் தற்போது ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளேன்.

மதுக்கடைகள் திறப்பதால் இன்று இரவு நான் பீர் வாங்க முடிவு செய்துள்ளேன். அப்படி பீர் குடிக்க செல்ல 2 நண்பர்களை கூட்டி செல்வேன் என்றால் அது ரோஜர் பின்னி மற்றும் லஷ்மன் சிவராமகிருஷ்ணன் தான்” என்றார்.

இந்த பேட்டியின் போது பாகிஸ்தான் வீரரான ஜாவித் மியாந்தந்துடனான மோதல் குறித்தும் சாஸ்திரி பேசினார். கடந்த 1985 இல் நடந்த உலக சாம்பியன்ஸ் ஃபைனல் குறித்து பேசினார்.நான் இவனுகலோடதான் உக்காந்து சரக்கடிப்பேன்: ஓப்பனாக போட்டுடைத்த ரவி சாஸ்திரி 3

சாஸ்திரி கூறுகையில், “ஆடி காரை கைப்பற்றுவதில், மியாந்தந்தும் அதிக ஆர்வம் காட்டினார். ஆனால் அதற்கான வாய்ப்பு அவருக்கு இல்லை. அவர் மிகச்சிறந்த வீரர், சிறந்த போட்டியாளர். எதிரணி வீரரை திசை திருப்ப எந்த லெவலுக்கும் செல்லும் வீரர். ஆனால் அந்த ஃபைனலில் என் முழுகவனமும் அந்த கார் மீதே இருந்தது. அதனால் அதில் அவருக்கு தோல்வியே மிஞ்சியது” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *