உங்கள நினைச்சா பெருமையா இருக்கு கோஹ்லி… தாஹிர் பெருமிதம்
இந்திய அணியின் கேப்டன் கோஹ்லிக்கு எதிராக விளையாடுவது கூட பெருமை என்று தென் ஆப்ரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் கேப்டன் டூ பிளசிஸ் சதம் அடித்து கை கொடுத்ததன் மூலம் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்கா அணி 269 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 20 விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் கோஹ்லி தனது பொறுப்பை உணர்ந்து விளையாடி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.
கோஹ்லி விக்கெட்டை இழந்து வெளியேறும் போது, அவரின் சிறந்த ஆட்டத்தை பாராட்டும் வகையில் ரசிகர்கள் எழுந்து நின்று தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர், தென் ஆப்ரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிரும் போட்டியை மறந்து கோஹ்லிக்கு கை கொடுத்து தனது பாராட்டை தெரிவித்தார்.
இந்நிலையில் கோஹ்லிக்கு எதிராக விளையாடுவது கூட தனக்கு கிடைத்த கவுரவம் என்று பெருமையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் கோஹ்லிக்கு கை கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் தாஹிர்.
போட்டியை மறந்து பெருந்தன்மையுடன் பதிவிட்டுள்ள இந்த ட்வீட்டை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.