இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இன்று இரவு நடக்கும் முதல் டி20 போட்டியில் வெல்ல இந்தியாவிற்கே வாய்ப்புகள் அதிகம் என முன்னாள் இந்திய வீரர் ஜாம்வான விரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.
அதிலும் இந்திய வெல்வதற்கு 95% வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறியுள்ளார் சேவாக்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி இம்முறை 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டி கொண்ட நெடுந் தொடரில் பங்கேற்கிறது. இதனால் இந்தத் தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக இதுபோன்ற நீண்ட நாள் தொடரில் டெஸ்ட் போட்டிகள் தான் முதலில் தொடங்கும். ஆனால் இம்முறை சற்று நேர்மாராக டி20 போட்டிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி மான்சஸ்டர் நகிரில் செவ்வாய்க்கிழமை (இன்று) இரவு இந்திய நேரப்படி 10 மணியளவில் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கு முன்னதாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. அதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள தயாராக உள்ளது என தெரிகிறது.
இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவை பந்தாடிய இங்கிலாந்து அணி, அதே பார்மை தொடரும் பட்சத்தில் இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
கடந்த 2017ல் இருந்து இந்திய அணியை வழிநடத்தும் விராட் கோலி பெறும்பாலும் அனைத்து தொடர்களிலும் வெற்றியை கண்டுள்ளார்.
இந்நிலையில், இந்த தொடரிலும் அவர் இதனை நிகழ்த்திக் காட்டுவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களை அடைய இந்திய கேப்டன் விராட் கோலிக்கு 17 ரன்களும், ரோஹித் சர்மாவுக்கு 51 ரன்களும் தேவைப்படுகிறது.
Virat Kohli captain of India and Rohit Sharma of India celebrates the wicket of Colin Munro of New Zealand during the 3rd T20I match between India and New Zealand held at the Greenfield Stadium, Thiruvananthapuram 7th November 2017 Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS
இதுவரை இவ்விரு அணிகள் 11 டி20 போட்டியில் மோதியுள்ளது, அதில் இந்தியா அணி 5 இல் வெற்றியும் இங்கிலாந்து அணி 6 இல் வெற்றியும் பெற்றுள்ளது.
இதுவரை இந்தியா அணி இங்கிலாந்தில் நடந்த இரண்டு டி20 போட்டியிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.
அந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா அணி என்பதை இன்று பொறுத்துருந்து தான் பார்க்க வேண்டும்.