இந்த நட்சத்திர இந்திய வீரர் தற்கொலை செய்ய நினைத்தார்

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், அவரது 13 வயதில் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடலாம் என்ற முடிவு எடுக்காமல் இருந்தால், அவரை விட ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளரை இந்திய அணி பெற்றிருக்க முடியாது. உத்தரபிரதேசத்தில் 15 வயதிற்கு உட்பட்டோர்க்கான அணியில் இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்தார். கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விடலாம் என்றும் நினைத்தாராம்.

“உத்தரபிரதேச அணிக்கு தேர்வாக நான் கடும் பயிற்சி செய்தேன். எனக்கு அணியில் இடம் கிடைக்காமல் போனதால், தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். இது போன்ற சூழ்நிலையில் அனைவர்க்கும் நடப்பது தான் இது,” என குல்தீப் யாதவ் தெரிவித்தார்.

“நான் பள்ளியில் மாணவனாக இருந்தேன், அப்போது கிரிக்கெட்டை ஜாலிக்காக தான் விளையாடுவேன். இது தான் என் வாழ்க்கையாக மாறும் என்று நினைக்கவே இல்லை. என் தந்தை தான் நான் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டார், பிறகு ஒரு பயிற்சியாளரிடம் அழைத்து சென்றார்,” என அவர் மேலும் கூறினார்.

ஆனால், இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என உத்தரபிரதேச அணியில் இடம் பிடிக்க கடும் பயிற்சி செய்தார் குல்தீப் யாதவ்.

இந்திய அணியின் குல்தீப் யாதவ் வேகப்பந்து வீச்சாளராக இருக்க ஆசை பட்டார், ஆனால் அவரது பயிற்சியாளர் கூறியதால் சுழற்பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

“நான் எப்பொழுதுமே வேகப்பந்து வீச்சாளராக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன், ஆனால் என் பயிற்சியாளர் என்னை சுழற்பந்து வீச்சாளராய் மாற்றினார். நான் சில பந்துகளை வீசும்போது (சீனா-மேன்), அதையே பழக்கமாக வைத்துக்கொள் என கூறினார். இல்லை என்றால், நான் வித்தியாசமாக வீசுகிறேன் என்று எனக்கே தெரிந்திருக்காது,” என குல்தீப் யாதவ் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகும் போது பதற்றமாக இருந்ததாகவும் கூறினார். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு விளையாடுவது முதலில் பதற்றமாக இருந்ததாக கூறிய அவர் அந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்டை எடுத்தார் குல்தீப்.

“அந்த போட்டியில் விளையாடும் போது ஒரே பதற்றமாக இருந்தது. அது இந்தியாவிற்கு வாழ்வா சாவா போட்டி. நான் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுடன் விளையாடினேன். அந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை எடுத்த பிறகு தான் எனக்கு பயம் சென்றது,” என கான்பூரை சேர்ந்த குல்தீப் யாதவ் கூறினார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.