ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கான கணிக்கப்பட்ட இந்திய அணி!! 1
4 of 11
Use your ← → (arrow) keys to browse

4.கருன் நாயர்

2016ல் இங்கிலாந்து தொடரில் முச்சதம் விளாசிய பின்னர் தற்போது தான் மீண்டும் அணிக்கு வருகிறார்.

’இரண்டு வருடத்துக்கு முன் இருந்ததை விட இப்போது சிறப்பான பேட்ஸ்மேனாக முன்னேறி இருக்கிறேன்’ என்று கிரிக்கெட் வீரர் கருண் நாயர் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் 14-ம் தேதி விளையாடுகிறது. பெங்களூரில் நடக்கும் இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கான கணிக்கப்பட்ட இந்திய அணி!! 2

இந்நிலையில் கருண் நாயர் கூறும்போது, ’கடந்த ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளேன். இடைபட்ட காலத்தில் என்னை தயார்படுத்திக் கொண்டேன். பேட்டிங்கில் அதிக பயிற்சி மேற்கொண்டேன். உடல் தகுதியிலும் கவனம் செலுத்தினேன். உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்ததால் அணியில் இடம்பிடித்துள்ளேன். இரண்டு வருடத்துக்கு முன் அணியில் சேர்ந்தபோது எப்படி யிருந்தேனோ, அதை விட சிறந்த பேட்ஸ்மேனாக முன்னேறி இருக்கிறேன்.

ஆப்கான் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் பற்றி கேட்கிறார்கள். அந்த அணி இப்போதுதான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. டி20 போட்டிகளை விட டெஸ்ட் போட்டி வித்தியாசமானது. இதில் விக்கெட் வீழ்த்துவது அவர்களுக்கு கடினம் என்றே நினைக்கிறேன். ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கான கணிக்கப்பட்ட இந்திய அணி!! 3ஐபிஎல் போட்டியில் ரஷித் கான் பந்துவீச்சில் விளையாடி இருக்கிறேன். அவர் சிவப்பு நிற பந்தில் அதிகம் விளையாடி இருப்பதாக நினைக்கவில்லை. அதனால் அவர்களுக்கு இது சவாலாகவே இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2016-ம் ஆண்டு விளையாடியபோது முச்சதம் அடித்தேன். மீண்டும் அடிப்பேனா என்பது தெரியாது. அணியின் வெற்றிக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன்’ என்றார்.

4 of 11
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *