பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையேயான 2வது டி20 போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றுள்ளது. அத்துடன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
கடந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், இன்றைய போட்டியை வெல்ல இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. இன்று நடைபெறும் போட்டி இந்திய அணியின் 100வது டி20 போட்டி என்பதால், வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் கேப்டன் ரோகிஷ் ஷர்மா உள்ளார்.

Photo by Deepak Malik / Sportzpics for BCCI
இருப்பினும் இன்றைய போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்கலாம் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி வங்காளதேச அணியின் லிட்டோன் தாஸ், முகமது நைம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் ஜெட் வேகத்தில் வங்காள தேச அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

Photo by Arjun Singh / Sportzpics for BCCI
பவர் பிளே-யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் குவித்தது. அதன்பின் வங்காளதேச அணியின் ஸ்கோர் உயர்வில் மந்த நிலை ஏற்பட்டது.
லிட்டோன் தாஸ் 21 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். முகமது நைம் 31 பந்தில் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார். முஷ்பிகுர் ரஹிம் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
சவுமியா சர்கார் 20 பந்தில் 30 ரன்களும், மெஹ்முதுல்லா 21 பந்தில் 30 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இருவர்களின் ஆட்டத்தால் வங்காளதேசம் 150 ரன்னை நெருங்கியது. வங்காளதேசம் 19 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரில் வங்காளதேசம் 9 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் சாஹல் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.