இந்தியா–இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்னும் சற்று நேரத்தில் ஓடிசாவின் கட்டக்கில் உள்ள பாரபட்டி மைதானத்தில் துவங்கவுள்ளது.
கட்டாக் மைதானத்தில் இதற்கு முன்பு ஒரே ஒரு 20 ஓவர் போட்டி நடந்துள்ளது. 2015–ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி 92 ரன்னில் முடங்கி தோற்றதும், அதனால் ரசிகர்கள் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை வீசி கலாட்டா செய்ததும் நினைவு கூரத்தக்கது.
டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தெர்வு செய்துள்ளது.
இந்தியா:
ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, டோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை:
தரங்கா ,டிக்வெல்லா, குசல் ஜனித் பெரேரா, மேத்யூஸ், குணரத்னே, திசரா பெரேரா (கேப்டன்), தசுன் சானகா, அகிலா தனஞ்ஜெயா,துஸ்மந்தா சமீரா, விஷ்வா பெர்னாண்டோ, நுவான் பிரதீப்
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை எளிதாக கைப்பற்றிய நிலையில், ஒருநாள் போட்டித் தொடரை வழக்கமான கேப்டனான விராட் கோலி இல்லாத நிலையில் ரோஹித் சர்மாவின் தலைமையில் சற்று மெனக்கெடுதலுடன் 2-1 என வசப்படுத்தியது. இந்நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் டி 20 தொடரை சிறப்பான முறையில் அணுகுவதற்கு ஆயத்தமாகி உள்ளது இந்திய அணி.
இருப்பினும் டி20 ஆட்டம் என்பது ஒருநாள் போட்டியின் வடிவத்தில் இருந்து மாறுபட்டது. மேலும் போட்டி நடைபெறும் பாராபத்தி மைதானத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற டி20 ஆட்டம் இந்திய அணிக்கு மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி 20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி வெறும் 92 ரன்களில் ஆட்டமிழந்திருந்தது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இதனால் இம்முறை இந்திய அணி டி 20 தொடரை சிறப்பான முறையில் தொடங்க வேண்டும். அதேவேளையில் இந்த வடிவிலான கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியே வந்துள்ளது. இரு அணிகளும் 11 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதிய நிலையில் இந்தியா 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதிலும் கடைசியாக மோதிய 4 ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்விகளை சந்திக்கவில்லை.
இந்தத் தொடரில் அறிமுக வீரர்களாக வாஷிங்டன் சுந்தர், பசில் தம்பி, தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான சவுராஷ்டிராவை சேர்ந்த ஜெயதேவ் உனத்கட் ஒரு வருடத்துக்கு பிறகு அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். அவர், கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் விளையாடியிருந்தார்.