நியூஸிலாந்து அணியின் சூழல் பந்து வீச்சாளர் ஆன ஜீதன் படேல் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
37 வயதான சூழல் பந்து வீச்சாளர் ஜீதன் படேல் முதல் முதலில் 2005இல் ஜிம்பாபே அணிக்கு எதிராக களம் இறங்கினார்.இவர் கடைசியாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வங்கதேசம் அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் விளையாடினார்.இவர் இந்த சாம்பியன் ட்ரோபி 2017இல் இடம் பிடித்து இருந்தார் ஆனால் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
நியூஸிலாந்து அணியின் சூழல் பந்து வீச்சாளர் ஜீதன் படேல் இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளிலும் 43 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.இவர் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 69 விக்கெட்களும் ஒரு நாள் போட்டிகளில் 49 விக்கெட்களும் எடுத்து உள்ளார்.
ஜீதன் படேல் இறுதியாக சிறப்பாக விளையாடிய போட்டிகள் என்று பார்த்தால் மேற்க்கு இந்திய அணிக்கு எதிராகவும் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடினார்.
இவர் இந்திய அணியுடனும் சிறப்பாக விளையாடி உள்ளார், கொல்கத்தாவில் நடந்த போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக 47 ரன்கள் அடித்து அசத்தினார்.
அவர் பாகிஸ்தானுடனும் வங்காளதேசத்துடனும் தொடர்ந்து தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டார், ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் தொடர்களுக்கு அவர் நினைவு கூர்ந்தார், மேலும் நியூஸிலாந்து முன்னணி விக்கெட் வீரர் என்ற தொடரை முடித்து தனது தேர்வுக்கு நியாயப்படுத்தினார்.
டெஸ்ட் போட்டிகளில் இவர் இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாடினார் அந்த போட்டியில் இடையில் மழை வந்ததால் ஆட்டம் இடையிலேயே தடைப்பட்டது.
இவரை தொடர்ந்து நியூசிலாந்து வீக்கெட் கீப்பர் பேட்ஸ்மான் லூக் ரொன்சியும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிட்ட தக்கது.