டிராவிட், கங்குலியை பார்த்தபோதே தெரிந்துவிட்டது எனக்கு இனிமேல் இந்திய அணியில் இடமில்லை என்று : சஞ்சய் மாஞ்சரேக்கர்
இந்திய அணிக்காக 37 டெஸ்ட் மற்றும் 74 ஒருநாள் போட்டிகளில் ஆடியவர் சஞ்சய் மாஞ்ரேக்கர். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார். 1996ல் இந்திய அணிக்கு சௌரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அறிமுகம் ஆன போது தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக கூயுள்ளார் சஞ்சய்.

தனது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை எழுதி வெளியிட்ட அவர் இது பற்றி கூறினார், அவருடைய புத்தகத்தின் பெயர், Imperfect.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் அவர் கூறியதாவது,
கங்குலியை அணியில் எடுக்க வேண்டாம் என்றுதான் இருந்தும். ஆனால் அவருடைய திறமைக்காக எடுத்தோம். அவர் உள்ளூர் போட்டிகளில் பெரிதாக ஏதும் ரன் அடிக்கவில்லை. ஆனால்,.அபருடைய திறமையை வைத்து எடுத்தோம். ஆனால் இங்கிலாந்துள் அவர் ஆடிய முதல் ஆட்டம் எங்களை பிரமிக்க வைத்துவிட்டது. அதனால் அப்படியே அணியில் இருந்துவிட்டார்.
அதேபோல் ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக விளையாடுவதற்காகவே செய்தது போல அணியில் வந்த இறக்கினார். இருவரும் ஒரே போட்டியில் அற்புதமாக ஆடினார்கள்.
இவர்களை பார்த்ததும் அப்போதே முடிவு செய்துவிட்டேன். இனி நமக்கு இந்திய அணியில் வேலை கிடையாது என. அதன்பிறகு நானே ஓய்வை அறிவித்துவிட்டேன்
எனக் கூறினார் சஞ்சய்