வரவிருக்கும் ஐபிஎல் 2020 தொடரில் கிங்ஸ் லெவன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, பீல்டிங் பயிற்சியாளர் ஜான்ட்டி ரோட்ஸ். இந்த இரண்டு ஆளுமைகளின் சேர்க்கை கிங்ஸ் லெவன் அணிக்கு சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத்தருமா என்பது இந்த ஐபிஎல்-ன் சுவாரசியமாகும்.
இந்நிலையில் கும்ப்ளேயுடன் சேர்ந்து பணியாற்றும் தருணத்தை ஆவலுடன் எதிர்நோக்கும் ஜான்ட்டி ரோட்ஸ் கூறியதாவது, “கும்ப்ளேயினால்தான் நான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பீல்டிங் கோச் பொறுப்பை ஏற்றேன்.
டாப் லெவல் கிரிக்கெட்டில் சாதித்துக் காட்டியவர் அனில் கும்ப்ளே. உண்மையில் கிரிக்கெட்டையும் தாண்டிய மூளைக்காரர். ஆம்! ஒரு அணியின் தலைமைப் பயிற்சியாளார் என்றால் இவரைப்போன்ற திறமையுடையவர் அவசியம். இந்தப் பொறுப்புக்கு வெறும் கிரிக்கெட் வீரர் என்பதையும் தாண்டிய மூளை வேண்டும் அது கும்ப்ளேயிடம் எக்கச்சக்கமாக உள்ளது.”
இவ்வாறு கூறினார் ஜான்ட்டி ரோட்ஸ். அயல்நாட்டினரும் புகழும் இத்தகைய ஒரு பயிற்சியாளரைத்தான் விராட் கோலி தினமும் பிசிசிஐ உச்ச நீதிமன்றம் நியமித்த வினோத் ராய் உறுப்பினராக இருந்த குழுவிடம் நீக்குமாறு தொடர் குறுஞ்செய்திகளை அனுப்பி வெளியேற்றினார் என்பதையும் நாம் மறக்கலாகாது.
ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்த நிலையில், இதுவரை ஒருமுறை கூட டைட்டிலை வெல்லாத அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் ஒன்று. எனவே இந்த சீசனில் கண்டிப்பாக டைட்டிலை வெல்லும் முனைப்பில் உள்ளது பஞ்சாப் அணி.
கோப்பையை எதிர்நோக்கியிருக்கும் பஞ்சாப் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக மைக் ஹெசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். 13வது சீசனில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 சீசன்களாக அந்த அணியின் கேப்டனாக இருந்து செயல்பட்ட அஷ்வினை கேப்டன்சியிலிருந்து மட்டுமல்லாமல் அணியிலிருந்தே தூக்கியது பஞ்சாப் அணி. புதிய கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கெய்லும் ராகுலும் இறங்குவார்கள். அதற்கடுத்த வரிசையில் மயன்க் அகர்வால், நிகோலஸ் பூரான், சர்ஃபராஸ் கான் ஆகியோர் இறங்குவார்கள். இந்த சீசனில் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. எனவே அவர் மிடில் ஆர்டரில் வலு சேர்ப்பார். ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டராக கிருஷ்ணப்பா கௌதம் ஆடுவார். இளம் ஸ்பின்னர்கள் ரவி பிஷ்னோய் அல்லது முருகன் அஷ்வின் ஆகிய இருவரில் ஒருவர் ஸ்பின்னராக ஆடுவார்.
ஆடும் லெவனில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் தான் ஆடமுடியும். கெய்ல், பூரான், மேக்ஸ்வெல் ஆகிய மூவரும் இடம்பெறுவார்கள் என்பதால் எஞ்சிய ஒரு இடத்தில் ஷெல்டான் கோட்ரெல் அல்லது முஜீபுர் ரஹ்மான் இறங்குவார். நிகோலஸ் பூரான் அணியில் இடம்பெறவில்லை என்றால், கோட்ரெல் மற்றும் முஜீபுர் ஆகிய இருவருமே ஆடுவார்கள். மேலும் ஃபாஸ்ட் பவுலர்களாக முகமது ஷமி மற்றும் வளர்ந்து வரும் இளம் ஃபாஸ்ட் பவுலர் இஷான் போரெல் ஆகியோர் ஆடுவார்கள்.