சச்சினின் மிகப்பெரிய ரசிகர் யார்? ப்ரெட் லீ 1

உலக கிரிக்கெட்டின் மாஸ்டர் ப்லாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் உலகின் பல அழிக்க முடியா சாதனைகளை உருவாக்கிய ஜாம்பவான் சச்சின். அவருக்கு கோடிக்கனக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், தற்போது அவருடைய மிகப்பெரிய ரசிகர் ஒருவர் என, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ப்ரெட் லீ ஒருவரை கண்டரிந்துள்ளார்.

தனது இன்ஸ்டக்ராம் பக்கத்தில் அவர் ஒரு ரசிகரின் புகைப்படத்தை பதிவிட்டு கூறியிருப்பதாவது,

சச்சின் டெண்டுல்கர் உங்களுடைய மிகப்பெரிய ரசிகரை நான் கண்டுவிட்டேன்.

https://www.instagram.com/p/BY0bpgNFqek/

உங்களுடைய பெருமைமிகு ரசிகர் அவர். இந்த படத்தை உங்களிடம் காடுவதாக வாக்குற்தி கொடுத்துள்ளேன்.

எனத் பதிவிட்டுள்ளார் ப்ரெட் லீ.

 மும்பையில் நடுத்தரக் குடும்பத்தில் (1973) பிறந்தவர். தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மராத்திய எழுத்தாளர்.

தன் மனம்கவர்ந்த இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் பெயரை மகனுக்கு சூட்டினார்.

 அண்ணனின் வழிகாட்டுதலால் கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரிடம் பயிற்சி பெற்றார்.

பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யா மந்திர் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

பள்ளிகளுக்கு இடையேயான போட்டி ஒன்றில் இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்தனர்.

மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் முதன்முதலாக 15-வது வயதில் விளையாடி 100 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கி, 16-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார்

அந்த பொடியன் பிற்காலத்தில் அவர்கள் அனைவரது பந்துவீச்சையும் பொடிப் பொடியாக்கியதை கிரிக்கெட் வரலாறு பெருமிதத்துடன் பதிவு செய்தது.

இங்கிலாந்துக்கு எதிராக 1990-ல் முதல் சதம் அடித்து, சாதனைக் கணக்கை தொடங்கினார்.

தொடர்ந்து 24 ஆண்டுகளாக விளையாடியவர், அதுவரை கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்தார்.

டெஸ்ட் போட்டியில் 13 முறை, ஒருநாள் போட்டியில் 60 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றார். 4 முறை டெஸ்ட் போட்டிகளிலும் 14 முறை ஒருநாள் போட்டிகளிலும் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலகக் கோப்பை (1996) போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமைக்குரியவர்.

சென்னை சேப்பாக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதுகுவலியுடன் ஆடி 136 ரன்களைக் குவித்தார்.

200 டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்கள், சர்வதேசப் போட்டிகளில் 100 சதம் என ஏராளமான சாதனைகளைப் படைத்தவர்.

2010-ல் குவாலியரில் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 200 ரன்களைக் குவித்து உலக கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார். பந்துவீச்சிலும் வல்லவர்.

ஆட்டத்தில் காணப்படும் ஒழுங்கு, துல்லியம், நேர்த்தி, தனித்துவம் வாய்ந்த பாணி இவற்றால் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை வசப்படுத்தியவர். இவரது பெயரில் காமிக்ஸ்கள்கூட வெளிவந்தன.

மாநிலங்களவை நியமன உறுப்பினராக 2012-ல் தேர்ந்தெடுக் கப்பட்டார். பத்மவிபூஷண், பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, இந்திய விமானப் படையின் கவுரவ கேப்டன் என ஏராளமான விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார்.

2014-ல் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில் இவரது ‘பிளேயிங் இட் மை வே’ என்ற சுயசரிதை நூல் வெளிவந்தது. 200-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

* கிரிக்கெட் சாதனையாளரான சச்சின் இன்று 43-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தின் தூதராக இருந்து, மும்பை மாநகரை தூய்மைப்படுத்தி வருகிறார். மும்பை குடிசைவாழ் மக்கள் நலவாழ்வு, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு ஆகிய பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *