ஆட்டம் tie-ல் முடியும் போது, அமலில் வரும் Super Over-வும் தற்போது ரசிகர் மத்தியில் தோல்வி அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு நேற்று நடந்த முடிந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி சான்று. நேற்று நடந்த போட்டியில் Super Over-வும் tie-ல் முடிந்ததால், அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த விதியை, கிரிக்கெட்டை உண்மையாக நேசிப்பவர்கள், விமர்சகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பவுண்டரிகள் அடித்ததை மட்டுமே அடிப்படையாக கொண்டு முடிவு செய்வதா? என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.