2019 உலகக்கோப்பையில் விளையாட தோனி சிறப்பாக செயல்பட வேண்டும் – ஹர்பஜன் சிங்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் எதிர்காலத்தை பற்றி அனைவரும் பேசி வருகிறார்கள், இந்நிலையில் அவர்களுடன் சேர்ந்துள்ளார்கள் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் சவுரவ் கங்குலி, வி.வி.எஸ் லட்சுமண் மற்றும் ஹர்பஜன் சிங்.

ஒரு காலத்தில் அதிரடியாக விளையாடி போட்டியை முடிக்கும் மகேந்திர சிங் தோனி, சிறிது மாதங்களாக அந்த திறமை அவரிடம் இருந்து மறைந்தது. நியூஸிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியின் போது அவரிடம் அடித்து விளையாடும் திறமை குறைந்து வருகிறது என்பதை நிரூபித்தார். இதனால், அனைவரும் தோனியை விமர்சிக்க தொடங்கி விட்டார்கள்.

India’s Mahendra Singh Dhoni plays a shot during their fourth one-day international cricket match against Sri Lanka in Colombo, Sri Lanka, Thursday, Aug. 31, 2017. (AP Photo/Eranga Jayawardena)

கடந்த சில போட்டிகளாக சொதப்பி வரும் 36 வயதான மகேந்திர சிங் தோனி, 2019இல் நடக்கும் உலகக்கோப்பையில் விளையாடுவாரா மாட்டாரா என கேள்விகள் எழுகின்றன. தற்போது மகேந்திர சிங் தோனியை தான் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணி நம்புகிறது, ஆனால் சிறப்பாக செயல் பட்டால் தான் 2019 உலகக்கோப்பையில் தோனி விளையாடுவார் என ஹர்பஜன் சிங் கூறுகிறார்.

“உலககோப்பைக்கு இன்னும் பல நாட்கள் இருக்கிறது. ஒரு வருடமே அதிகம். இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றம் நடக்கிறது. அந்த நேரத்தில் யார் பார்மில் இருக்கிறார்களோ அவர்கள் விளையாடுவார்கள். அனுபவம் முக்கியம் தான், அதே நேரத்தில் பார்மும் தேவை. தோனி ஒரு சிறந்த வீரர், உலகக்கோப்பையில் விளையாட அவர் அதற்கு முன்பு சிறப்பாக செயல்பட வேண்டும்,” என ஹர்பஜன் சிங் கூறினார்.

“தோனி தொடர்ந்து ரன் அடிக்க வேண்டும், அப்படி அவர் செய்தால் அவரை விட சிறந்த வீரர் யாரும் இல்லை. தோனியை சரியாக வழி நடத்துகிறார் விராட் கோலி,” என அவர் மேலும் கூறினார்.

“ஹர்பஜன் சிங் கூறியது போல் 2019 உலகக்கோப்பை தூரமாக தான் இருக்கிறது. தோனி ரன் அடிக்க வேண்டும்,” என கங்குலி கூறினார்.

“தோனியை பாதுகாப்பது கோலி இல்லை என்று நினைக்கிறன். அடுத்த உலகக்கோப்பையில் மகேந்திர சிங் தோனிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. சச்சினை கங்குலி பார்த்து கொண்டது போல், தோனியை பார்த்து வருகிறார் விராட் கோலி,” என வி.வி.எஸ் லட்சுமண் கூறினார்.

பல ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மகேந்திர சிங் தோனி, சிறப்பாகவே விளையாடி வருகிறார். இந்த வருடம் 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள தோனி 716 ரன் அடித்திருக்கிறார். இதனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.