முரளி விஜய் காயம் :
காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்த முரளி விஜய். தற்போது கிரிக்கெட் ஆட தயாராக இருக்கிறார் என தெரிகிறது. கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது மணிக்கட்டு காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். பின்னர் நடந்த எந்த தொடரிலும் அவர் பங்கேற்க்கவில்லை.
ஐபிஎல் தொடரில் இருந்தும் விளகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை உடனான் தொடரில் அவர் இடம் பெற்றார். ஆனால் அப்போதும் மணிக்கடட்டில் வலி இருப்பதாக கூறி வெளியேறினார். கடைசி நேரத்தில் ஷிகர் தவான் அழைக்கப்பட்டார்.
காயத்திலிருந்து மீண்டார் :
தற்போது கடின உழைப்பிற்க்குப் பிறகு காயத்திலிருந்து மீண்டுள்ளார். டிஎன்பிஎல் தொடரிலும் ஆடப் போகிறார்.
மேலும் கொவை அணிக்கு கேப்டன் முரலி விஜய் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை கிங்க்ஸ் அணி தற்போது மோசமான நிலையில் உள்ளது. அந்த அணி தற்போது பட்டியளில் 6வடுஹ் இடத்தில் உள்ளது. அவரின் வரவு அணிக்கு உற்ச்சாகத்தை கொடுக்கும்.
விஜய் ஷங்கர் இல்லை :
கோவை கிங்ஸ் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் விஜய் ஷங்கர். அவர் தமிழ்க வீரர் ஆவார். தற்போது இந்தியா ஏ அணி தென்னாப்பிரிக்கவில் விளையாடி வருகிறது. அங்கு இந்திய அணியின் பேட்ஸ்மேன் பிரியங்க் பன்ச்சல் காயம் அடைந்தார். அவருக்கு மாற்றாக விஜய் ஷங்கர் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார்.
அங்கு நடந்த முத்த்ரப்பு தொடரில் கலக்கி வருகிறார் விஜய் ஷங்கர். முத்தரப்பு தொடரின் இருதி போட்டியில் ஷ்ரேயஷ் ஐய்யருக்கு (140*) பக்க பலமாக நின்று 72 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். அதன் பிறகு 12ஆம் தேதி நடக்கும் தென்னப்பிரிக்க ஏ அணியுடனான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள பொகிறார் ஷங்கர். இதன் காரணமாக டிஎன்பிஎல் தொடரை விட்டுச் சென்றுள்ளார் அவர்.