தென்னாப்ரிக்காவின் கேப்டவுன் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தென்னாப்ரிக்காவின் கேப்டவுனில் மழை அளவு குறைந்துவிட்டது. இதன் காரணமாக அங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினசரி தேவைக்கு 50 லட்சம் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், மாநகர குடிநீர் வாரியம் கொடுக்கும் தண்ணீரை வீட்டின் தோட்டப் பகுதி, விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் தண்ணீர் பஞ்சம் அதிகம் இருப்பதால், இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா – தென் ஆப்ரிக்காவின் முதன் டெஸ்ட் போட்டியின் போது பெய்த மழையால் கொஞ்சம் தண்ணீர் கிடைத்துள்ளது. தற்போது அந்த தண்ணீரும் குறைந்து வருகிறது.
இந்த தண்ணீர் பஞ்சம் காரணமாக கிளப் மற்றும் பள்ளிகளுக்கு இடையில் நடக்க இருந்த கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை தென் ஆப்ரிக்காவின் மேற்கு மாகாண கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
தென்னாப்ரிக்காவின் கேப்டவுன் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தென்னாப்ரிக்காவின் கேப்டவுனில் மழை அளவு குறைந்துவிட்டது. இதன் காரணமாக அங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினசரி தேவைக்கு 50 லட்சம் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், மாநகர குடிநீர் வாரியம் கொடுக்கும் தண்ணீரை வீட்டின் தோட்டப் பகுதி, விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் தண்ணீர் பஞ்சம் அதிகம் இருப்பதால், இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா – தென் ஆப்ரிக்காவின் முதன் டெஸ்ட் போட்டியின் போது பெய்த மழையால் கொஞ்சம் தண்ணீர் கிடைத்துள்ளது. தற்போது அந்த தண்ணீரும் குறைந்து வருகிறது.
இந்த தண்ணீர் பஞ்சம் காரணமாக கிளப் மற்றும் பள்ளிகளுக்கு இடையில் நடக்க இருந்த கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை தென் ஆப்ரிக்காவின் மேற்கு மாகாண கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.