இந்திய கிரிக்கெட் அணியின் புது ஜெர்சி ரெடி

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது பிசிசிஐ. தற்போது இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடந்து கொண்டு வருகிறது. ஐபில் தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடர் நடைபெறுகிறது. இதற்காக நடப்பு சாம்பியன் இந்தியாவிற்காக புது ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்டார் இந்தியா நிறுவனம் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்கு ஸ்பான்சராக இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிலையில் புதிய ஸ்பான்சராக செல்போன் நிறுவனமான OPPO-வை தேர்ந்தெடுத்தது பிசிசிஐ.

538 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய அணியை ஒப்பந்தம் செய்துள்ள OPPO நிறுவனம் தான் இந்திய அணிக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஸ்பான்சராக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் OPPO நிறுவனத்தின் பெயரை பொறிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ இன்று அறிமுகப்படுத்தியது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.