அவுட் கொடுத்ததால் கோபத்தில் ட்ரெஸ்ஸிங் ரூம் ஜன்னல் கதவை உடைத்த பாக்கிஸ்தான் வீரர்

இங்கிலாந்தில் வருடாவேடம் உள்ளூர் கிளப்களுக்காக லீக் போட்டிகள் நடக்கும் அதில் ஒன்று லங்கஷைர் லீக் போட்டிகள். இந்த லீக் போட்டியில் கிளித்திரோ கிரிக்கெட் கிளப் 1வது லெவேன் அணிக்கும் கிலோனே கிளப் அணிக்கும் இடையில் போட்டி நடந்தது.

கிளித்தோரே அணியின் துவாக்க வீரர் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டி20 போட்டியை பொறுத்தவரை ஒரு வீரர் ஆட்டமிழந்த பின் 3 நிமிடங்களுக்குள் அடுத்ததாக களமிறங்கும் வீரர் களத்திற்குள் வந்திருக்க வேண்டும். அவ்வாறு வரவில்லை எனில் அவர் அவுட் என அறிவிக்கபடுவார். இதுபோன்ற சம்பவம் தான் இந்த போட்டியிலும் நிகழ்ந்துள்ளது.

இந்தமுடிவினால் ஆட்டமிழந்த ஃபாவத் ஆலம் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள ஜன்னல் கதவை ஆத்திரத்தில் உடைத்துள்ளார்.

கிளித்தோரே அணியின் அந்நியநாட்டு வீரர்களில் மிகசிறந்த வீரர்களில் ஒருவராக இவரை அந்த அணியின் நிர்வாகம் சென்ற ஆண்டு அறிவித்திருந்தது. மேலும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேவுக்குழுவும் இவரின் யுக்திகளையும் செயல்பாடுகளையும் கவனித்து வந்தது. தற்போது இவரின் இந்த மாதிரியான செயல்களால் இரு அணி நிர்வாகமும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து ரசிகர் ஒருவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது,

Well batted pro, so @Clitheroe_CC pro gets timed out so smashed @ColneCricketwindow @lancs_league well batted, weren’t extaclty gunna win was we pic.twitter.com/tKdOCsp7H3
— jack mansfield (@jackmansfield19) June 1, 2018

Vignesh G:

This website uses cookies.