ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 டி30 போட்டிகளில் விளையாடவுள்ளது. தற்போது இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ளது.
இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.
நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு செய்தியைக் வெளியிட்டார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்.

அதாவது, 5 ஒருநாள் போட்டிகள் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆதிரேலிய திரும்புவார். அவர் மேலும், அக்டோபர் 7 முதல் 13 வரை நடைபெறும் 3 டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய சுற்றுப்பயணதிற்க்குப் பின் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆசஸ் தொடரில் விளையாடவுள்ளது.
இந்த போட்டிகளுக்காக தன்னை தயார் செய்து கொள்ள அவரை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம். அவர் அங்க சென்று முதல் தரப் போட்டியான செஃப் ஃபீல்டு சீல்டு தொடரில் விளையாடுவார் எனவும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்ற முறை ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது இப்படித்தான் தற்போது ஒய்வு பெற்ற இடது கை வேகப்பந்து வீச்சாலர் மிட்செல் ஜான்சன் பாதியிலேயே ஆசஸ் தொடரில் தன்னை தயார் செய்ய ஆஸ்திரேலியா சென்றது குறிப்பிடத்தக்கது.

©Getty Images
மேலும், அந்த ஆசஸ் தொடரில் வரலாறு படைக்கும் விதமாக ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் வென்றது. அந்த தொடரில் மிட்செல் ஜால்சன் 37 விக்கெட்டுகளை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.