பாகிஸ்தான் பேட்ஸ்மேனுக்கு 1 வருடம் கிரிக்கெட் விளையாட தடை!!
பாகிஸ்தான் நாட்டில் நாட்டின் கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த இரண்டு வருடமாக ஐ.பி.எல் தொடருக்கு போட்டியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற 5 அணிகளை கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்து ஸ்பாட் பிக்சிங் பிரச்சனை இருந்து வந்தது
அப்போது இந்த பிரச்சனையை பெரிதாக எடுத்துக்கொள்ளாத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இந்த வருடம் அந்த பிரச்சனை தலை தூக்கி அந்த டி20 லீக்கை பாதித்தது. உடனடியாக ஓட்டம் பிடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியன் யார் யார் ஒத்த ஸ்பாட் பிக்சிங் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளது என கண்டறிய ஒரு குழு அமைத்து விசாரித்து வந்தது.
கடந்த பல மாதங்களாக பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகந்து இர்பான், காலித் லடிப் ஆகியோரை கிரிக்கெட் ஆட சில காலம் தடை செய்தது. அதற்போது அவர்களுடன் சேர்ந்து பேட்ஸ்மேன் நாசிர் ஜம்செட்டையும் 1 வருடம் கிரிக்கெட் ஆட தடை செய்துள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற பி.எஸ்.எல் தொடரில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் குறித்த தகவல் தெரிந்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியதிற்கு தெரிவிக்கவில்லை. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த விசாரணைக்கு வந்தபோது சரியாக ஒத்துழைக்காததாலும் அவருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவரது மனைவி சும்ராவும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். இதனால், அவரது போன் மற்றும் அவருடைய செய்கைகளில் நோட்டம் விட்டபோது இவை அனைத்தும் தெரியவந்துள்ளது.
எப்படியும் கடந்த இரு வருடமாக அவர் எந்த இரு கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடாமல் இருப்பதால், வரும் பிப்ரவரி மாதம் 2018ஆம் வருடம் அவறதுபோறு வருட தடைக்காலம் முடிவிற்கு வந்துவிடும். 28 வயதான நாசிர் ஜம்ஷெட் பாகிஸ்தான் அணிக்காக 2 டெஸ்ட் 45 ஒருநாள் போட்டிகள் நரரும் 18 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் துப்பறியும் குழு கொடுத்த தகவலின் பேரில் தான் இந்த விசாரனைனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.