இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து ரூ.450 கோடி இழப்பீடு தொகையை பெற்றுத்தர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வக்கீல்கள் சார்பில் ஐ.சி.சி.க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் ஆடாததால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.450 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான ஒப்பந்தப்படி இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 2 கிரிக்கெட் தொடர்களில் ஆடியிருக்க வேண்டும். ஆனால் இந்த தொடர்களில் ஆட பிசிசிஐ மறுத்தது. இந்நிலையில் இந்த தொடர்களில் இந்தியா ஆடாததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, பிசிசிஐ ரூ.450 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுபற்றி செய்தி நிறுவனத்திடம் கூறிய ஐசிசியின் செய்தித் தொடர்பாளர், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வழக்கறிஞர்கள் அனுப்பிய நோட்டீஸ் கிடைத்துள்ளது. கிரிக்கெட் சர்ச்சைகளுக்கு தீர்வுகாணும் ஐசிசி கமிட்டியின் தலைவரிடம் இது விரைவில் அனுப்பப்படும்” என்றார். ஏற்கெனவே இதற்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுப்பியிருந்த நோட்டீஸை, பிசிசிஐ நிர்வாகிகள் நிராகரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. – ஏஎப்பி
பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் ஆடாததால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.450 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான ஒப்பந்தப்படி இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 2 கிரிக்கெட் தொடர்களில் ஆடியிருக்க வேண்டும். ஆனால் இந்த தொடர்களில் ஆட பிசிசிஐ மறுத்தது. இந்நிலையில் இந்த தொடர்களில் இந்தியா ஆடாததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, பிசிசிஐ ரூ.450 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுபற்றி செய்தி நிறுவனத்திடம் கூறிய ஐசிசியின் செய்தித் தொடர்பாளர், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வழக்கறிஞர்கள் அனுப்பிய நோட்டீஸ் கிடைத்துள்ளது. கிரிக்கெட் சர்ச்சைகளுக்கு தீர்வுகாணும் ஐசிசி கமிட்டியின் தலைவரிடம் இது விரைவில் அனுப்பப்படும்” என்றார். ஏற்கெனவே இதற்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுப்பியிருந்த நோட்டீஸை, பிசிசிஐ நிர்வாகிகள் நிராகரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. – ஏஎப்பி