தர்மசாலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வானிலை சரியாக இல்லாததால் இலங்கை அணி வீர்ரகள் தர்மசலாவில் இருந்து மொகாலிக்கு செல்ல முடியாமல் மாட்டிக்கொண்டனர். மேலும், தரைவழியில் பஸ்ஸில் சென்றால் மொகாலிக்கு 260 கி.மி ஆகும் என அதிலும் மறுத்துவிட்டனர்.
மொகாலியில் தொடர்ந்து மழை பெயதுவருவதால் நாளை கிரிக்கெட் போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியாவிடம் இழந்த அந்த அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
தர்மசாலாவில் நேற்று முன் தினம் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி மொகாலியில் நாளை நடக்கிறது.
இதற்காக இந்திய வீரர்கள் மொகாலி வந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மழை பெய்துவருவதால் மைதானம் மூடப்பட்டுள்ளது. ’மழை நீர் தேங்காத வண்ணம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், குறைந்த ஓவர்களில் போட்டியை நடத்த வாய்ப்பிருக்கிறது’ என்று மொகாலி கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தர்மசாலாவில் கடும் மழை காரணமாக, திங்கள்கிழமை இலங்கை வீரர்கள் செல்ல வேண்டிய பிரத்யேக விமானம் தாமதமாக அங்கிருந்து கிளம்பியது.
இது குறித்து சண்டிகர் நகர் வானிலை ஆய்வு மைய அதிகாரி சுரிந்தர் பால் கூறியதாவது,
மேகமூட்டம் அதிகமாக காணப்பட்டாலும், புதன் கிழமை நடைபெறும் ஒருநாள் போட்டியை பெரிதும் பாதிக்காது. இந்த மேகமூட்டம் நீடிக்கும் ஆனால் போட்டியை சிறுது நேரம் மட்டுமே பாதிக்ககூடும்.
திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் கண்டிப்பாக பெரிய தூரல் மழை இருக்கும். அந்த சூழ்நிலை புதன்கிழமை மாறிவிடும். எதிர்பார்த்தபடி புதன்கிழமை மேகமூட்டம் குறைந்துவிடும். வெப்பநிலை அதிகபட்சமாக 22° செல்சியசுக்கும்க்கும் குறைந்தபட்சமாக 11° செல்சியசுக்கும் இருக்கும், இதனால் எல்லோரும் சரியான உடைகளில் வந்து போட்டியை ரசியுங்கள்.
எனக் கூறினார் அவர்.