தோனியை நோகடித்த விஷயம் – இதால தான் பேட்டியே கொடுக்குறதில்லையாம்!

தோனி ஊடகங்களுக்கு பேட்டியளிக்க மறுப்பதற்கு, அவரை நோகடிக்கும் விதமாக நடந்த சில சம்பவங்கள் தான் காரணம் என பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்து டி20, ஒருநாள், சாம்பியன்ஸ் டிராபி என மூன்றுவகையான உலகக் கோப்பையையும் வென்று கொடுத்தவர் தல தோனி. ஆனால் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்காமல் எப்போதும் ஒதுங்கிவிடுவார். அதற்கான காரணத்தை பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசி தெரிவித்துள்ளார்.

ராஜ்தீப் சர்தேசி கூறியதாவது :

2007ல் நடந்த உலகக்கோப்பை போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி படுதோல்வியடைந்தது. அப்போது தோனியிடம் பேட்டி எடுக்கப்பட்டது. ஆனால் அவர் சீனியர் வீரர்களை கையால்வது மிகவும் கடினமான விஷயம் என கூறியதாக வந்த தவறான செய்தி பெரிய அளவில் வெடித்தது.

அதோடு, உலகக் கோப்பை தோல்வியால் அணியின் முன்னனி வீரர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டது. அவர்களின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டது.

அதன் பின்னர் 2013ல் ஐபிஎல் போட்டியில் ஸ்பார்ட் பிக்ஸிங் செய்ததாக தோனி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரங்கள் குறித்து தோனி, கூறும்போது, “என்னை விமர்சியுங்கள் தவறில்லை. என் ஆட்டம் குறித்து விமர்சிக்கலாம். ஆனால் நான் போட்டியில் ஸ்பார்ட் பிக்ஸிங் செய்ததாக எப்படி உங்களால் இப்படி குற்றம்சாட்ட முடிகிறது. இதைக் கேட்டால் நெருப்பில்லாமல் புகையுமா என கேள்வி கேட்கின்றனர்.” என கூறியிருந்தார்.

அதே போல் ஒரு வெளிநாட்டு பத்திரிக்கையாளர் நீங்கள் எப்போது ஓய்வு பெறப்போகிறீர்கள் என கேள்வி கேட்டார். அதற்கு அவரை அருகில் அழைத்து நீங்கள் இந்தியராக இருந்தால், உங்களின் உறவினர்கள் யாரேனும் சிறப்பாக கீப்பிங் செய்வார்கள் என்றால் அவருக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டலாம். ஆனால் நீங்கள் வெளிநாட்டினர் உங்களுக்கு ஏன் இந்த கேள்வி என கூறியிருந்தார்.

இப்போது கூட என் வீட்டு வந்தால், ஒரு டீ கொடுத்து தோனியின் பெற்றோர் உபசரிப்பார்கள். ஆனால் பத்திரிக்கையாளர் என்றால் ஒருவார்த்தை கூட பேச மாட்டோம். என தோனி கூறியதாக ரஜ்தீப் கூறியுள்ளார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.