ஜார்ஜியா, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் இருந்து வேல்ஸ் அணியின் முன்னணி வீரர் கராத் பேலே விலகியுள்ளார்.

வேல்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கராத் பேலே. லா லிகாவின் முன்னணி அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக பேலே விளையாடி வருகிறார்.
ரஷியாவில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற இருக்கிறது. கால்பந்து விதிமுறையில் போட்டியை நடத்தும் அணியை விட மற்ற அணிகள் தகுதிச் சுற்றின் அடிப்படையில் நேரடி தகுதி பெற வேண்டும்.
அதன்படி வேல்ஸ் அணி அயர்லாந்து மற்றும் ஜார்ஜியா அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் கராத் பேலே களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கெண்டைக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கராத் பேலே இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில் நடந்த வெனிசுலாவுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. அதுவும் வெனிசுலா அணி அடித்த சுய கோலால் தான் அர்ஜென்டினா அணி தோல்வியில் இருந்து தப்பியது.
மற்றொரு ஆட்டத்தில் சிலி அணி 0-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மற்ற ஆட்டங்களில் உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயையும், பெரு அணி 2-1 என்ற கோல் கணக்கில ஈகுவடாரையும் வீழ்த்தியது. பிரேசில்-கொலம்பியா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இன்னும் 2 லீக் ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் இந்த பிரிவில் இருந்து பிரேசில் அணி (37 புள்ளிகள்) மட்டும் தகுதி பெற்று இருக்கிறது.
உருகுவே (27 புள்ளிகள்) 2-வது இடத்திலும், கொலம்பியா (26 புள்ளிகள்) 3-வது இடத்திலும், பெரு (24 புள்ளிகள்) 4-வது இடத்திலும் இருக்கின்றன. அர்ஜென்டினா அணி 6 வெற்றி, 6 டிரா, 4 தோல்வி என்று 24 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், சிலி அணி 23 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன.
இதனால் இரு அணிகளும் நேரடியாக உலக கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக்கல் உருவாகியுள்ளது. அடுத்த லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா அணி, பெருவையும் (அக்டோபர் 5-ந் தேதி), ஈகுவடாரையும் (அக்டோபர் 10-ந் தேதி) எதிர்கொள்கிறது. சிலி அணி, ஈகுவடார் (அக்டோபர் 5-ந் தேதி), பிரேசில் (அக்டோபர் 10-ந் தேதி) அணிகளுடன் மோதுகிறது.