யுவராஜ் சிங் என்று சொன்னாலே, கிரிக்கெட்டுக்காக அவர் உயிரை பணயம் வைத்தது தான் ஞாபகம் வரும். 2011 உலகக்கோப்பையின் போது கேன்சரால் அவதி பட்டு வந்தாலும், சில முக்கிய இன்னிங்ஸ் விளையாடி இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வாங்கி தந்தார். கேன்சரால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை, அதில் இருந்து மீண்டு வந்து அடுத்த 1 வருடத்தில் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்தார் யுவராஜ் சிங். பல முறை அவரை அணியில் இருந்து தூக்கினாலும், மீண்டும் கடினமாக உழைத்து இந்திய அணிக்குள் வந்துள்ளார்.
அதே போல் அணியை விட்டு வெளியேற்றிய பிறகு மீண்டும் 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். வந்த வேகத்தில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களை தூசு தட்டினார். பல நாட்கள் கழித்து இந்திய அணியில் இடம் பிடித்தது, இங்கிலாந்துக்கு எதிராக 150 ரன் அடித்து அசத்தினார். ஆனால், அதன் பிறகு அதே போல் விளையாட தவறிவிட்டார். சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் அவர் சொதப்பி விட்டதால், மீண்டும் அவரை அணியை விட்டு தூக்கினார்கள்.
இந்திய அணிக்கு தகுதி பெற ‘யோ-யோ’ டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், யுவராஜ் சிங் தேர்ச்சி பெறுவதில்லை என தகவல் வந்தது. அதே நேரத்தில், யுவராஜ் சிங்குக்கு கடைசியாக ஒரு போட்டியில் விளையாடவைத்து பிரியாவிடை கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டது. ஆனால், அதை மறுத்துவிட்டார் யுவராஜ் சிங். அவருக்குள் இன்னும் பல கிரிக்கெட் திறமைகள் இருப்பதால் தான் அவர் அதை வேண்டாம் என்றார்.
யுவராஜ் சிங் ஓய்வு பெறாமல் இருப்பதற்கு சில காரணங்களை பார்ப்போம்:
பல வீரர்கள் 35 வயதில் தான் ஓய்வு பெறுகிறார்கள்
யுவராஜ் சிங்குக்கு 35 வயது தான், ஆனால் அவர் ஓய்வு பெறவேண்டும் என்று அவசியம் இல்லை. ஒருகாலத்தில் நட்சத்திர வீரராக இருந்த அவர், பந்துகளை பறந்து பறந்து பிடிப்பார். இனியும் யுவராஜ் பேட்டிங் சிறப்பாக விளையாடுவார், ஆனால் அவரது உடற்தகுதி தான் அவருக்கு பிரச்சனையே. இந்திய அணி உடற்தகுதிக்கு முக்கிய துவம் கொடுப்பதால், அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் தான். இந்த வருட தொடக்கத்தில் வந்ததை போலவே மீண்டும் அவரால் பெரிய பெரிய ஷாட்கள் அடிக்க முடியும். அவரது உடற்தகுதி மட்டும் உதவி செய்தால், அவரால் மீண்டும் இந்திய அணிக்கு வரமுடியும்.
திணறும் 4வது வரிசை வீரர்கள்
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களுள் யுவராஜ் சிங்கும் ஒருவர். இந்திய அணியின் நடுவரிசை பகுதிக்கு முதுகெலும்பாய் திகழ்ந்தார். அவரை அணியில் விட்டு தூக்கியதும், ஹர்டிக் பாண்டியா, கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, என பல வீரர்களை வைத்து முயற்சி செய்தார்கள். ஆனால், 4வது வரிசையில் இறங்கி ஒரு நல்ல ஸ்கோர் அடிக்க திணறுகிறார்கள். இதனால், 4வது வரிசையில் இறங்கி இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடியவர் யுவராஜ் சிங் தான். இதனால், அவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்திய அணிக்காக அவர் மீண்டும் விளையாட நினைக்கிறார்
யுவராஜ் சிங்குக்கு கடைசியாக ஒரு போட்டியில் விளையாடவைத்து பிரியாவிடை கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டது. ஆனால், அதை மறுத்துவிட்டார் யுவராஜ் சிங். இதனால், அவர் மீண்டும் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாட விரும்புகிறார் என நன்றாக தெரிகிறது. இனியும் யுவராஜ் பேட்டிங் சிறப்பாக விளையாடுவார், ஆனால் அவரது உடற்தகுதி தான் அவருக்கு பிரச்சனையே. அவரது உடற்தகுதி மட்டும் உதவி செய்தால், அவரால் மீண்டும் இந்திய அணிக்கு வரமுடியும்.