மீண்டும் நான் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்ந்தால் அது முட்டாள்தனம் 1
during a practice session at Central Broward Stadium in Lauderhill, Florida, United States of America. Photo by WICB Media/Randy Brooks of Brooks Latouche Photography

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை மேல் பிரச்சனையாக தன் இருபது வருகிறது. கடந்த 2013 சாம்பியன்ஸ் கோப்பையில் இருந்து ஒரே பிரச்சனை மயம்தான். 2013 சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு, சரியான சம்பளம் இல்லை என அப்ப்போதைய கேப்டன் டேரன் சம்மி தலைமையில் வீரர்கள் போர்க்கொடி தூக்கினர். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிர்க்கெட் நிர்வாகம் அப்படி பிரச்சனை செய்தவர்களது ஒப்பந்தத்தை ஒரு வருடத்திற்கு முடித்து வைத்தனர்.மீண்டும் நான் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்ந்தால் அது முட்டாள்தனம் 2

அப்போதிலிருந்து மீண்டும் மீண்டும் வீரர்களுக்கும் கிரிக்கெட் வாரியத்திற்கும் அடிக்கடி பிரச்சனை தான். அதன் பிறகு 2014ஆம் ஆண்டு இந்திய அணியில் சுற்றுபயணம் செய்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் சம்பள பிரச்சனை தீர்க்க படத்ததால் தொடரின் பாதிலேயே தயாகம் திரும்பினர். இதனால் வீரகளை கடுமையாக எச்சரித்து ஓரளவிற்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்தது. அதுவும் சரியில்லை என மீண்டும் பிரச்சனை செய்தனர் வீரர்கள். இதன் காரணமாக அணியில் இருந்து முன்னை வீரர்கள் டேரன் சம்மி, கெய்ரோன் பொல்லார்ட், டிவைன் ப்ராவோ, சுனில் நரேன் என பல வீரர்கள் அணியில் இருந்து கைவிடப்பட்டனர்.மீண்டும் நான் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்ந்தால் அது முட்டாள்தனம் 3

 

அதே போல இளம் வீரர் ஜேசன் ஹோல்டர் கேப்டனாக நியமிக்கப்பட்டு அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக கிறிஸ் கெய்ல், டேரன் சம்மி, கெய்ரோன் பொல்லார்ட், டிவைன் ப்ராவோ, சுனில் நரேன் உள்ளிட்ட வீரர்கள் உலகில் நடிக்கும் டி20 போட்டிகளில் மட்டும் பங்கு கொண்டு விளையாடி வந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் வீர்ரகள் தேவை என்றால் மட்டும் முக்கியமான ஐ.சி.சி தொடருக்கு மட்டும் அவர்களை அழைத்துக்கொள்ளும். அப்படி தான் முக்கிய வீரர்களை வைத்து சென்ற வருட டி20 உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி கைபற்றியது. ஆனாலும் , இந்த தொடருக்கு வரும் முன் அணி நிர்வாகம் எந்த கரு வசதியும் செய்து கொடுக்கவில்லை, அணிக்காக டி சர்ட் ஜெர்சி கூட தொடர் நடைபெறும் இந்தியாவில் தான் வந்து தயாரித்து கொண்டோம் என அணி நிர்வாகம் மீது குற்றம் சாட்டினார் கேப்டன் டேரன் சம்மி.

மீண்டும் நான் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்ந்தால் அது முட்டாள்தனம் 4

தற்போது, இது குறித்து டிவைன் பிராவு பேசியுள்ளார். இவர் கடைசியாக டி20 லீக் ஆடி 9 மாதங்கள் ஆகிறது. கடந்த வருடம் பிக் பாஷ் லீக்கின் போது தசை நார் கிழிந்த போனது. இதன் காரணமாக அவர் 9 மாதங்களாக எந்த ஒரு டி20 லீக்கிலும் விளையாவில்லை.

தற்போது அந்த காயத்தில் இருந்து குணமாகி மீண்டுள்ளார் பிராவோ. மேலும், மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடுவது குறித்தும் பேசினார்.

மீண்டும் நான் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்ந்தால் அது முட்டாள்தனம் 5

மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடுவது குறித்து யோசிப்பதில்லை. எனக்கு தற்போது 34 வயதாகிறது. தற்போது ஒரு கம் பேக் கொடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆடுவது முட்டாள் தன்மானது. என்னுள் மீதம் உள்ள கிரிக்கெட்டை டி20 லீக்கில் தான் ஆடி கழிக்கப் போகிறேன். எனது ரசிகர்களுக்காக ஆடப் போகிறேன். அவர்களுக்கு பிராவோ இன்னும் கிரிக்கெட் ஆடுகிறார் என்று தோன்றினால் போதும். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மீண்டும் ஆடுவது ஆகாத காரியம்

நான் முழு உடற்திறனுடனும், ஆட்டத்திறனுடனும் இருந்தபோதுதான் மே.இ.தீவுகள் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். ஆனால், அதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை. அப்படி இருக்கையில் தற்போது எனது வயது 34-ஐ கடந்துவிட்டது. எனவே இனிவரும் காலங்களில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

தற்போது தேசிய அணிக்குத் திரும்புவதை விட தொடர்ந்து கிரிக்கெட் விளையாட மட்டுமே விரும்புகிறேன். அதுவே எனது நோக்கமாகவும் உள்ளது. கடந்த 9 மாதங்களாக காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தமளித்தது.

மீண்டும் நான் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்ந்தால் அது முட்டாள்தனம் 6

இனி வரும் காலங்களில் இந்தியன் பிரீமியர் லீக், பிக்பாஷ் லீக், வங்கதேச பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் உள்ளிட்டவைகளில் மட்டுமே விளையாடும் நிலையில், இருக்கிறேன். தற்போது விளையாடி வரும் ஷார்ஜா டி10 லீக் சற்று வித்தியாசமானதாக உள்ளது. இதில் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன் என்றார்.

எனக் கூறினார் பிராவோ

பிராவோ, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக கடந்த 2010-ல் டெஸ்ட் போட்டியிலும், 2014-ல் ஒருநாள் போட்டியிலும் கடைசியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *