“Real Chokers”… இது தாண்டா உண்மையான RCB… ராஜஸ்தானிடம் மரண அடி வாங்கிய பெங்களூர் அணி; வச்சு செய்யும் ரசிகர்கள்
மீண்டும் ஒரு முறை பெங்களூர் அணி தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முடியாமல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த தொடர்களை போலவே நடப்பு ஐபிஎல் தொடரிலும் தொடர்ச்சியாக படுதோல்விகளை மட்டுமே சந்தித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, திடீரென வெற்றி பாதைக்கு திரும்பி ஹைதராபாத், சென்னை உள்பட வலுவான அணிகளை அசால்டாக வீழ்த்தி பலருக்கு ஷாக் கொடுத்தது.
தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்ட பெங்களூர் அணி லீக் தொடரில் தனது இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கெத்தாக வீழ்த்தியதோடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ப்ளே ஆஃப் தொடரில் இருந்தும் வெளியேற்றியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை உலகக்கோப்பையை வென்ற வெற்றியை போல கொண்டாடிய விராட் கோலி உள்ளிட்ட பெங்களூர் வீரர்கள், எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டனர்.
கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் பெங்களூர் அணியை கட்டுப்படுத்துவே முடியாது, இந்த முறை பெங்களூர் அணி தான் சாம்பியன் என பேசி வந்தாலும், பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் நிச்சயமாக எலிமினேட்டரை கூட தாண்டாது என முழு நம்பிக்கை வைத்தனர்.
கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்தை போலவே எலிமினேட்டர் போட்டியில் பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பிய பெங்களூர் அணி, கடைசி நேரத்தில் வெற்றிக்காக சிறிது போராடினாலும், ஜெய்ஸ்வால், ரியான் பிராக் உள்ளிட்ட ராஜஸ்தான் வீரர்களின் சிறப்பான பேட்டிங்கால் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து நடப்பு தொடரில் இருந்தும் வெளியேறியது.
இந்தநிலையில், பெங்களூர் அணியின் இந்த தோல்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களும் “ஈ சாலா கப் நம்தே” என்ற ஒற்றை அடைமொழியை வைத்து கொண்டு 17 வருடமாக காமெடி மட்டுமே செய்து வரும் பெங்களூர் அணியை வச்சு செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த தருணத்திற்காக காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் தங்களது மொத்த வன்மத்தையும் தங்களது சமூக வலைதள பக்கங்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதில் சில;