தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அனுபவம் வாய்ந்த இஷாந்த் சர்மா விளையாடவில்லை. போட்டியின் அன்று காலையில் அவருக்கு உடல்நலம் சரியில்லாததால், அவரால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியவில்லை.
அன்று அவர் தலைவலியால் அவதிப்பட்டதால் தான், அவரால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியவில்லை என தகவல் வந்தன.
2016/17 இல் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா சொல்லி கொள்ளும் படி விளையாடவில்லை. சமீபத்தில் நடந்த இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியில் கூட அவர் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை. ஆனால் ஒரு முறை புவனேஸ்வர் குமார் ஓய்வு கேட்டதும், அந்த இடத்தில் இருந்து அற்புதமாக செயல் பட்டு முக்கிய வீரராய் மீண்டும் உருமாறினார் இஷாந்த் சர்மா.
ஆசியாவிற்கு விளையாடிய போட்டிகளை கண்டால், எந்த வித சந்தேகமும் இல்லாமல் இஷாந்த் சர்மா தான் சிறந்த பந்துவீச்சாளர் என்று சொல்லலாம். ஆனால், முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது அனைவர்க்கும் ஆச்சரியத்தை அளித்தது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜேஸ்ப்ரிட் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் சிறப்பாக வீசியதால், அவர்கள் இரண்டாவது போட்டியில் விளையாடுவார்கள். இதனால், அனுபவம் வாய்ந்த இஷாந்த் ஷர்மாவிற்கு முகமது ஷமி வழி விடுவார். முகமது ஷமி அந்த போட்டியில் 4 விக்கெட் எடுத்தார், அதில் மூன்று விக்கெட்டுகள் 4வது நாள் எடுத்தது. மூன்றாவது நாள் அன்று மழை பெய்ததால், 4வது நாள் ஆட்டம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக சென்றது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தென்னாபிரிக்கா அணி 208 ரன்னை இலக்காக கொடுத்தது. ஆனால், இந்திய அணியோ தென்னாபிரிக்கா பந்துவீச்சாளர்களிடம் சரண் அடைந்தார்கள். இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி ஜோஹன்னேஸ்பேர்கில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்குகிறது.